Tuesday, April 16, 2013

பணத்தை இரட்டிப்பாக்கச் சிறந்த வழி--ஜென் சிந்தனை!



1)என் பின்னால் நடக்காதே;நான் வழிநடத்திச் செல்ல மாட்டேன்.
   என் முன்னால் நடக்காதே;நான் தொடர மாட்டேன்.
   என் அருகிலும் நடக்காதே
   என்னைத் தனியாய் விடு!

2)ஒரு பதவியில் இன்றியமையாதவனாக இருக்காதே!
   அவ்வாறாயின் பதவி உயர்வு எப்படி கிடைக்கும்!

3)நல்ல வாய்ப்புக் கிடைக்கும்போது நழுவ விடாதே,
   வாயை மூடிக்கொண்டு இருப்பதற்கு!

4)பத்து ரூபாய் கடன் வாங்கிய நபர் பின் காணப்படவேயில்லை என்றால்,
   அது ஒரு நல்ல முதலீடுதான்!

5)எப்போதுமே நினைவில் கொள்,நீ தனித்தன்மை வாய்ந்தவன் என்பதை
   மற்ற அனைவரையும் போல்!

6)தண்ணீரின் ஆழத்தை இரண்டுகால்களாலும் சோதித்துப் பார்க்காதே!

7)நீ சொல்வதெல்லாம் உண்மையாயிருப்பின், எதையும் நினைவில் கொள்ள      அவசியமில்லை!

8)ஒரே இரவில் தூக்க மாத்திரையையும் பேதி மாத்திரையையும் சாப்பிடாதே!

9) பணத்தை உடனே இரட்டிப்பாக்கச் சிறந்த வழி அதை இரண்டாக மடித்து சட்டைப்பையில் வைத்துக் கொள்வதுதான்!

10)உன் உதடுகள் அசைந்து கொண்டிருக்கும்போது நீ எதையும் கற்றுக் கொள்ள முடிவதில்லை! 


14 comments:

  1. ஹா... ஹா... சிந்தனைகளை ரசித்தேன்...

    பல உண்மை வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. சிந்திக்க வைக்கும் சிரிப்பான வரிகள்! சிறப்பான வரிகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. எல்லாமே நல்ல கருத்துக்கள்தான். ஆனாலும் எனக்குப் பிடித்தது நாலாவதாக உள்ளதுதான்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. super ..........முக்கியமா 6 7 8 9

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. //தண்ணீரின் ஆழத்தை இரண்டுகால்களாலும் சோதித்துப் பார்க்காதே!// :-)

    ReplyDelete
  6. சிறப்பான வரிகள்.

    கடைசி மிகவும் பிடித்தது.....

    ReplyDelete
  7. உன் உதடுகள் அசைந்து கொண்டிருக்கும்போது நீ எதையும் கற்றுக் கொள்ள முடிவதில்லை!

    முற்றிலும் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete