Wednesday, December 10, 2014

மருத்துவம் செய்யும் கணினி!



ராமுவுக்கு ஒருநாள் பயங்கரத் தலைவலி. நண்பன் சோமுவிடம் சொன்னான்எனக்குத் தலைவலி மண்டையைப் பிளக்கிறது.மருத்துவரைப் பார்க்கப்போகிறேன்.”

உடனே சோமு சொன்னான்அநாவசியமாக மருத்துவருக்குச் செலவழிக்காதே..மருந்துக் கடையில் ஒரு கணினி இருக்கிறது.அதனிடம் உன் சிறுநீரின் மாதிரி கொடுத்தால் அது கண்டுபிடித்துச் சொல்லி விடும் பிரச்சினை என்ன  என்றும் அதன்காரணத்தையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும்.20 ரூபாய்தான் செலவு.’

ராமு சிறுநீரை ஒரு குப்பியில் எடுத்துக் கொண்டு கனினியிடம் போய் சிறுநீரை ஊற்றிவிட்டுப் பணத்தையும் செலுத்தினான்.கணினி கடாமுடா எனச் சப்தங்கள் எழுப்பியது.சில பல விளக்குகள் ஒளிர்ந்தன.கடைசியில் ஒரு சீட்டு வெளியே வந்து விழுந்தது.அதில் எழுதியிருந்தது” உனக்கு ஒற்றைத் தலைவலி.அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.அதிக மன அழுத்தம்,சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெயிலில் போகக்கூடாது.ஒரு வாரம் கழித்து மீண்டும் வா”

அவன் ஆச்சரியப்பட்டான்.ஆனால் ஒரு வாரம் கழித்து வரும்போது அதைச் சோதித்துப் பார்த்த் விடுவது என முடிவு செய்தான்.

ஒரு வாரம் கழித்துக் கொஞ்சம் குழாய்த்தண்ணீர்,தன் நாயின் மலம்,தன் மனைவி மகள் இவர்களின் சிறுநீர் எல்லாம் கலந்து கொண்டுபோய் கணினியில் கொட்டி பணத்தை கட்டினான்.முன்பு போலவே,கட முட சப்தம் விளக்குகளுக்குப் பின் கனினி ஒரு சீட்டைத் துப்பியது.

அதில் எழுதியிருந்தது---

“உன் குழாய் நீரில் சாக்கடை கலந்திருக்கிறது.

உன் நாய் வயிற்றில் பூச்சி இருக்கிறது.

16 வயதான உன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள்

ஆறு மாதமாக உன் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள்.

இவ்வளவு பிரச்சினை இருந்தால் எப்படித் தலைவலி வராமல் இருக்கும்?”