Friday, January 17, 2014

புத்தகக் கண்காட்சி-ஒரு வித்தியாசமான பார்வை..படங்களுடன்!

விடுமுறை நாட்கள் முடிந்தபின் இன்று புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மாலை 3.30 மணி அளவில் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தானியில் 4 மணி அளவில் கண்காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ,மைதானத்தை அடைந்தேன்.சென்ற ஆண்டு கண்காட்சி நடக்கும் இடத்தை அடையும்போதே களைப்படைந்தது போல் இல்லாமல் இந்த ஆண்டு இலவச வாகன  வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்  எளிதாக  கண்காட்சி அரங்கை அடைந்தேன்.


    இலவச ஊர்தி
    திரும்புகையில்


பத்து ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு அரங்குக்குள் நுழைந்தேன்

நுழை வாசல்    
      உள்ளே நுழையும்போதே அதிகபட்சம் 2.30 மணி நேரமே செலவழிக்கத்                        திட்டமிட் டிருந்த படியால்,ஸ்டால்களைத் தேர்ந்தெடுத்து என் சுற்றலைத் துவங்கினேன்.மொத்தம் பத்து அரங்குகளுக்குச் சென்றிருப்பேன்!இன்று விடுமுறை நாளாக இல்லாததால் பதிவர்கள் யாரையும் பார்க்கவில்லை.அப்படி யாராவது வந்திருந்து அவர்களை நான் பார்த்தாலும் அவர்களுக்கு என்னைத் தெரியாது...ஒரு சோட்டா பதிவர்தானே!.டிஸ்கவரியிலும் யாரும் இல்லை.திரு வேடியப்பன் பிஸியாக இருந்தார்.

                                            

                                                     டிஸ்கவரியில் வேடியப்பன்
நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை,வாங்கிய புத்தகங்களின் சாம்பிள் ஒன்று கீழே!

                                          


 அவ்வாறு சென்று கொண்டிருந்தபோதுதான் கீதா பிரஸ் ஸ்டாலில் ஒரு பதிவரைப் பார்த்தேன்.அவரை எனக்குத் தெரியும்.நான் பார்த்தபோது சன் டி.வி. பெண் நிருபர் அவர் முகத்துக்கு நேராக மைக்கைப் பிடித்திருக்க அவர் காமிராவைப் பார்த்தபடி ஆன்மீகம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.அந்தப் பதிவர் திரு.சென்னைபித்தன் அவர்கள்!அதைப் படம் எடுக்க மறந்து விட்டேன்!

இம்முறை ஓய்வெடுக்கவும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.நிம்மதியாக அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்

                                                   
   
     வெளியே வந்தபின் அரங்கில் ஏதோ நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்
                                       

               பஸ்ஸில் ஏறி கேட்டை அடைந்து தானியில் ஏறி வீட்டை வந்தடைந்தேன்!
                                
      இன்னொரு நாள் மீண்டும் போக ஆசை!.......இன்ஷா அல்லா!
                                  

 லேட் டிஸ்கி:    ”நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை” என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்.ஆனால் பின்னூட்டங்களைக் காணும்போது நான் முப்பது புத்தகம் வாங்கியதாகத் தவறாகப் புரிந்து கொளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.மன்னிக்க!
                                                                                                                                                                        








                                                                                                                                                                              

.

Monday, January 6, 2014

மனைவிக்கு உதவிய கணவன்!

சமையலறையில் மனைவிக்கு வேலை மிக அதிகமிருப்பதைக் கவனித்த கணவன் அவளுக்கு உதவ எண்ணினான்.

நான் ஏதாவது உதவட்டுமா எனக் கேட்டான்.

மனைவிக்கு மகிழ்ச்சி

கணவனிடம் சொன்னாள்”அந்தக் கூடையில் இருக்கும் உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள்.பாதிக் கிழங்கின் தோலைச் சீவி இந்தப்பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு வேக வையுங்கள்.”

கணவனும் செய்தான்.

மனைவியிடம் பாராட்டுப் பெற எண்ணி அவளைப் பார்க்கச் சொன்னான்.

அவள் பார்த்து விட்டுப் பாராட்டவில்லை;மாறாக அவனை கேவலமாகப் பேசினாள்.

அவனுக்குப் புரியவில்லை.

நீங்களே சொல்லுங்கள்

அவன் என்ன தப்பு செய்தான்?............................

..........................

..........................

......................