Tuesday, December 24, 2013

கண்ணிருந்தும் குருடராய்.....?!

இன்று ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது.

நீங்களும் பாருங்களேன்!

மிகக்குறும்படம்--3. நிமிடம் 40 விநாடிகள்தான்

Saturday, December 21, 2013

தேவயானியின் கதை!



தேவயானி!

இன்று ஊடகங்களில் தினமும் தொடர்ந்து பரபரப்பாகப் பேசப்படும் பெயர்.

தேவயானி பற்றிய முழு விவரங்கள் தெரியுமா?

மிகவும் சுவாரஸ்யமான கதை!

மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் உண்டு.

அதில் ஒன்றுதான் தேவயானியின் கதை.

இவள் அசுர குரு சுக்கிராச்சாரியரின்  செல்ல மகள் .

சுக்கிராச்சாரியார் மிருதசஞ்சீவினி என்ற மந்திரத்தின் உதவியுடன் இறக்கும் அசுரர்களை யெல்லாம் உயிர்ப்பித்து வந்தார்.

இது தேவர்களுக்கு மிகவும் தொந்தரவாகப் போயிற்று.

அந்த மந்திரத்தக் கற்று வருவதற்காகப் பிருகஸ்பதியின் மகனான கசன் என்பவனை அனுப்பினர்.

அவனும் சென்று சுக்கிராச்சாரியாரிடம் சீடனாகச் சேர்ந்தான்.

அங்கேயே தங்கிப் பயில ஆரம்பித்தான்.

அவனுக்கும் தேவயானிக்கும் இடையே காதல் மலர்ந்த்து

அசுர்ர்கள் அவன் நோகத்தைத் தெரிந்து கொண்டு அவனைக் கொன்ற போதெல்லாம், தேவயானியின் துயர் கண்டு சுக்கிராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார்.

கடைசியில் அசுரர்கள் கசனைக் கொன்று எரித்துச் சாம்பலை மதுவில் கரைத்து குருவிடம் கொடுக்க அவர் அதைக் குடித்து விட்டார்.

பின் தேவயானி வந்து கதற,அவர் யோசித்தபோது நடந்தது புரிந்தது.

அவனை உயிர்ப்பித்து வெளிக்கொணர்ந்தால் அவர் இறந்து போவார்.

என்ன செய்வது?

அவனை வயிற்றுக்குள் உயிர்ப்பித்து அவனுக்கு மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார் .

அவனும் வெளியே வந்து, மந்திரத்தின் மூலம் ஆச்சாரியாரை உயிர்ப்பித்தான்.

ஆனால் காதலை விடக் கடமை  முக்கியம் எனச் சொல்லி,தேவயானியைப் பிரிந்து சென்றான்.

இதுவே தேவயானியின் கதை!

இக்கதை 1941இல்,”கச்சதேவயானி” என்ற பெயரில் படமாக வெளி வந்து வெற்றிகரமாக ஓடியது.

நடித்தவர்கள்—கொத்தமங்கலம் சீனு,டி.ஆர்.ராஜகுமாரி
....................................

அப்பு:அண்ணே !தேவயானியை அமெரிக்காவில கைது செஞ்சாங்களாமே.படப்பிடிப்பிக்குப் 
போயிருந்தாங்களா?

குப்பு: டேய் அது வேற தேவயானிடா.அங்க தூதரகத்தில அதிகாரி!

அப்பு:ஆமாண்ணே!அந்தக்காலத்துப் புராண இதிகாசங்களிலேயே சொல்லியிருக்கு, தூதர்களைக் கைது செய்யக் கூடாதுன்னு!

குப்பு:வெவரமாத்தான் பேசறே!இவங்க ஆதர்ஷ் ஊழல்ல மாட்டினவங்களாம்.

அப்பு:அடக் கடவுளே!இன்னும் அட்டையெல்லாம் கொடுத்தே முடியல்லை;அதுக்குள்ள அதில ஊழலா?

குப்புடேய்!அது ஆதார்டா!  
......................................
.....................................................

Wednesday, December 4, 2013

சாம்!கூரையின் உட்பக்கம் பெயிண்ட் அடிக்கணும்!-ராகமாலிகை



“Sam,the ceiling needs painting” என்ற புத்தகம் 1964 இல் வெளி வந்ததாம்;

வந்தபோது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதாம்,இப்போது அதெல்லாம் வெறும் ஜுஜுபி!

இநதப் பழைய புத்தகத்தை என்  நண்பர் ஒருவர் எங்கிருந்தோ வாங்கி வைத்திருந்து ஓரிரு ஆண்டுளுக்கு முன் என்னிடம் காட்டினார்.

மிகச் சிறிய புத்தகம்தான்.

மொத்தம் பத்துப் பன்னிரண்டு படங்கள். 

படங்களில் இரண்டு ஜோடிப் பாதங்கள் மட்டுமே. 

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பன்ச் லைன்! அவ்வளவே.

இதைப் பற்றி இங்கு என்னால் விளக்கமாகச் சொல்ல முடியாது.அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் பார்த்துக் கொள்ளுங்கள்!

............................................................................................................. 

பழசு பழசுதான்!

கணினிகளின் வரவுக்குப்பின்,அந்தக்காலத்து டைப்ரைட்டரை ஓரங்கட்டி விட்டார்கள்..

இப்போது அதற்கும்  மறுவாழ்வு வந்திருக்கிறது.

ரகசியமான ஆவணங்கள்,கடிதங்கள் இவற்றைக் கணினியில் அடித்தால் அது திருடு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால். லண்டன் இந்தியத் தூதரகத்தில் முக்கிய செய்திகளை இனி டைப்ரைட்டரில் அடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்களாம்!

(மறக்காமல் கார்பனை எரித்து விட வேண்டும்!)(

old is gold!---டைப்ரைட்டரைச் சொல்லவில்லை! செய்தியே கொஞ்சம் பழசுதான்!
.................................................................................................................

இந்தக்காலத்தில் சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. வெறும் பாட்டை வைத்து ஓட்டிக் கொண்டிருந்த காலத்தில்,நடிப்பு என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவர் அவர்..கர்ணனில் சில இடங்களில் மிகையாகத் தோன்றலாம்.ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு அது தேவை.’பெக்கெட்’ என்றொரு படம்.அதில் பீட்டர் ஒ டூலின் நடிப்பைப் பாருங்கள்.மிகையென எண்ணுவீர்கள்.ஆனால் அது தேவை(இந்தியில் நமக்ஹராம்,தமிழில் உனக்காக நான்).






Wednesday, October 9, 2013

செய்திகள்;வாசிப்பது.....

இன்று படித்த ஒரு செய்தி என்னைக் கோபப்பட வைத்தது.அறியாத சிறுவர்கள் விளைவு களைப் பற்றித் தெரியாமல்  சில செயல்களில் விளையாட்டாக ஈடுபடலாம்.ஆனால் வேலை பார்க்கும் இளைஞர்கள்,விளைவைப் பற்றியே சிந்திக்காமல் ஒரு செயலை ’விளையாட்டு’க் காகச் செய்யலாமா?

அம்பத்தூரில் ஒரு கார் சேவை மையத்தில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள்,தங்களுடன் பணிபுரியும் கார்த்திக் என்னும் இளைஞனைப் பிடித்து அவன் கால்சராயைக் கழட்டி அவன் பின்புறத்தில் காற்று அடிக்கும் கருவியின் குழாயைச் செருகிக் காற்றடித்தனராம்.அவன் வயிற்றில் காற்று நிரம்பி மயக்கமடையவே அவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.அங்கிருந்து போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளைஞன்,உடல் நேரானதும் போலீஸில் புகார் கொடுக்க,அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது என்ன விளையாட்டு?விபரீத விளையாட்டு?


நேற்றுப்படித்த ஒரு செய்தி


திருமாலின் தசாவதாரங்கள். எவை?

மத்ஸ்ய,கூர்ம,வராக,வாமன,நரசிம்ஹ,பரசுராம,ராம,கிருஷ்ண,பலராம.கல்கி இவையென்று சொல்லப்படுகிறது.வடக்கில் புத்தர் ஒரு அவதாரம் எனச் சொல்கிறார்கள்.

அதாவது,மீன்,ஆமை,பன்றி,வாமனன்,நரசிம்ஹம்,பரசுராமர்,ராமர்,கிருஷ்ணர்,பலராமர்.கல்கி.

நேற்று இராமேஸ்வரம் கோவிலில் பன்றி புகுந்து விட்டதாம் !

நகராட்சி ஊழியர்கள் அப்பன்றியைப் பிடிப்பதற்காகத் துரத்தும்போது அது அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு,கோவிலுக்குள் நுழைந்து இரண்டாவது பிரகாரம் வரை சென்று விட்டதாம்! அதை விரட்டிய பின் குடம்குடமாகத் தண்ணீர் ஊற்றிக் கோவில் பிரகாரத்தைச் சுத்தம் செய்தனராம்;விசேட பூசைகளும் செய்யப்பட்டனவாம்

இச்செய்தித் தலைப்பைப் படித்ததும் எனக்குத் தோன்றிய  நகைச்சுவையான எண்ணம்,பன்றி திருமாலின் அவதாரம் தானே ,எனவே இதில் பிரச்சினை என்ன இருக்கிறது என்பதே!

செய்தியை முழுவதும் படிக்கும்போது, என் கருத்தையே மதுரை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத்தின்  தலைவர் சொல்லியிருப்பது தெரிய வந்தது!

சரிதான்!இனிமேல் ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது எனச் சொல்லாதீர்கள்.(இதற்கு வேறு பொருளும் சொல்வர்)

ஆமை திருமாலின் அவதாரம்!

Monday, October 7, 2013

குடித்து விட்டு வண்டி ஓட்டினால்?!

என்ன நடந்திருக்கிறது பாருங்கள்!




     குடித்தது கள்ளல்ல பால்தான்
     பிடித்திருப்பது பால் புட்டிதான்
     படுத்திருப்பது சின்னச் சிசுதான்
     நெடிதாய் நிற்பதும் பொம்மைக்கார்தான்!


    வயதும் புட்டியும் வண்டியும் மாறினால்,தடம் புரளாதோ வாழ்க்கை! 
     

Monday, September 30, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-2 -(7)



                                                                      அனிச்சமும்

                                                          அன்னத்தின் தூவியும்



                                                       மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்

                         அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
                         அடிக்கு நெருஞ்சிப் பழம்--     குறள் 1120   (நலம் புனைந்துரைத்தல்)

அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சி முள் போன்றவை.

மிக மென்மையான அனிச்ச மலரும் அன்னத்தின் சிறகுமே மாதர் அடிக்கு நெருஞ்சி முள் போல் துன்பம் தருவன என்றால் ,அப்பாதங்களின் மென்மையை என்னென்று சொல்வது?!

   “பஞ்சு கொண்டொற்றினும் பைய,பைய என்று
    அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”--சிலப்பதிகாரம்

(மீள் பதிவு,சில திருத்தங்களுடன்!)


Saturday, September 28, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-6

                
                         தேய்ந்து வளர்ந்து மீண்டும் தேய்ந்து...................நிலாவின் நிலை!
                                                          களங்கங்களுடன் !

                                                              அழகிய பெண்
                                                    மாசு மருவற்ற முகப் பொலிவு!
                                             

         ” அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
            மறுவுண்டோ மாதர் முகத்து”---திருக்குறள்-1117

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்  உள்ளது போல் இந்த மாதர் முகத்தில்களங்கம் உண்டோ ?இல்லையே!

உண்மைதானே!
"நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்"(நா.பா-குறிஞ்சி மலர்)

"கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்”(நாமக்கல் கவிஞர்)




Friday, September 27, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்!

                                                                     கூற்றுவன்


                                             பெண்ணின் அழகிய கண்கள்



                                         பெண்மான்


         ”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
         நோக்கம்இம்  மூன்றும் உடைத்து” -திருக்குறள் -1085

எமனோ?கண்ணோ?பெண்மானோ?இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

ஆம்!
        பாயும் மான் போல் பார்வை!
       அப்பார்வையே நம்மைக் கொல்லும்!
       அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?!

       

Thursday, September 19, 2013

நாம் சிரித்தால் தீபாவளி!



தெருவெங்கும் வேட்டுச் சத்தம்;மத்தாப்பு வெளிச்சம்

நெருங்கி விட்ட தீபாவளிக்குக் கடைசி நேர வாங்குதல்கள்

சிறுவர்களின் ஆரவாரம்;பெரியவர்கள் பேச்சுக்குரல்

பக்கத்து வீடுகளில் பலகார நெய் மணங்கள்

ஏக்கத்தோடு பார்த்திருக்கும் என் பையன் சின்னராசு

அக்காவாய் அவனை அணைத்திருக்கும் அன்னக்கொடி

உடுப்பதற்குத் துணியில்லை,வெடிப்பதற்கு வெடியில்லை

அடுத்தவேளை சோறில்லை,அடுப்படியில் பூனை!

பலகாரமெல்லாம் மணத்தை முகர்ந்து மகிழ மட்டும்!

ஆனை வெடி பூனை வெடி அனைத்திலும் அவர் உழைப்பு

ஆனா பெரிய வெடியா ஃபேக்டரியிலே வெடிக்க

 வெடிகளைச் செய்தவர் வெடியிலே போய்ட்டாரே!

விடிஞ்சாத் தீபாவளி .எங்களுக்கு விடிவு எப்போ?

என்னைக்கு நாஞ்ச் சிரிக்க-  எங்களுக்கு

என்னைக்குத் தீபாவளி?


----ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை






Saturday, September 14, 2013

தாமரை வெல்லும்!



தாமரை என்றால் என்ன?
நமக்குத் தெரிந்த வரை ஒரு மலர்.
தாமரை மலரே இலக்குமியின் இருக்கையாம்.

கண்களைத் தாமரைக்கு ஒப்பிடுதல் வழக்கம்.

வடமொழியில் ராஜீவ லோசன என்பர்.

ஆனால் தாமரை எனபது ஒரு எண்ணிக்கையையும் குறிக்குமாம்.


இதோ ஒரு கம்ப ராமாயணப் பாடல்.....

தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
 தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி.

பத்துமுக இராவணன் மகனான இந்திரசித்து,தாமரை வடிவில்  தலை உடைய , தாமரைக் கணக்கிலானலான  அம்புகளை இலக்குவன் மேல் செலுத்தி ஆர்ப்பரித்தான்

தாமரை போன்ற கண்களை உடைய இராமனின் தம்பியாகிய இலக்குவன்
,தானும் தாமரை வடிவில் தலை உள்ள அம்புகளை தாமரைக் கணக்கில் விட்டு இந்திர சித்தின் அம்புகளைத் தடுத்து வீழ்த்தினான்
 
தாமரைக் கணக்கின்” என்றால் என்ன அர்த்தம்?

வடமொழியில் த்மம்என்று ஓர் எண் உள்ளதாம். அது, நூறு லட்சம் கோடி, . அதாவது கோடிகோடி.

அந்தப் த்த்தை, கம்பர் தாமரைஎன்று மொழிபெயர்க்கிறார் என்று சொல்கிறார்கள்

இந்திரசித்து  தாமரை மலர் வடிவத்தில் நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்த (தாமரைத் தலைய வாளி தாமரைக் கணக்கில்), பதிலுக்கு லட்சுமணனும் அதேபோன்ற  நூறு லட்சம் கோடி அம்புகளைச் செலுத்தி அவற்றை முறியடிக்கிறான்.

எப்படித் தாமரை விளையாட்டு? !