Tuesday, December 24, 2013

கண்ணிருந்தும் குருடராய்.....?!

இன்று ஒரு குறும்படம் பார்க்கக் கிடைத்தது.

நீங்களும் பாருங்களேன்!

மிகக்குறும்படம்--3. நிமிடம் 40 விநாடிகள்தான்

Saturday, December 21, 2013

தேவயானியின் கதை!



தேவயானி!

இன்று ஊடகங்களில் தினமும் தொடர்ந்து பரபரப்பாகப் பேசப்படும் பெயர்.

தேவயானி பற்றிய முழு விவரங்கள் தெரியுமா?

மிகவும் சுவாரஸ்யமான கதை!

மகாபாரதத்தில் பல கிளைக் கதைகள் உண்டு.

அதில் ஒன்றுதான் தேவயானியின் கதை.

இவள் அசுர குரு சுக்கிராச்சாரியரின்  செல்ல மகள் .

சுக்கிராச்சாரியார் மிருதசஞ்சீவினி என்ற மந்திரத்தின் உதவியுடன் இறக்கும் அசுரர்களை யெல்லாம் உயிர்ப்பித்து வந்தார்.

இது தேவர்களுக்கு மிகவும் தொந்தரவாகப் போயிற்று.

அந்த மந்திரத்தக் கற்று வருவதற்காகப் பிருகஸ்பதியின் மகனான கசன் என்பவனை அனுப்பினர்.

அவனும் சென்று சுக்கிராச்சாரியாரிடம் சீடனாகச் சேர்ந்தான்.

அங்கேயே தங்கிப் பயில ஆரம்பித்தான்.

அவனுக்கும் தேவயானிக்கும் இடையே காதல் மலர்ந்த்து

அசுர்ர்கள் அவன் நோகத்தைத் தெரிந்து கொண்டு அவனைக் கொன்ற போதெல்லாம், தேவயானியின் துயர் கண்டு சுக்கிராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார்.

கடைசியில் அசுரர்கள் கசனைக் கொன்று எரித்துச் சாம்பலை மதுவில் கரைத்து குருவிடம் கொடுக்க அவர் அதைக் குடித்து விட்டார்.

பின் தேவயானி வந்து கதற,அவர் யோசித்தபோது நடந்தது புரிந்தது.

அவனை உயிர்ப்பித்து வெளிக்கொணர்ந்தால் அவர் இறந்து போவார்.

என்ன செய்வது?

அவனை வயிற்றுக்குள் உயிர்ப்பித்து அவனுக்கு மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார் .

அவனும் வெளியே வந்து, மந்திரத்தின் மூலம் ஆச்சாரியாரை உயிர்ப்பித்தான்.

ஆனால் காதலை விடக் கடமை  முக்கியம் எனச் சொல்லி,தேவயானியைப் பிரிந்து சென்றான்.

இதுவே தேவயானியின் கதை!

இக்கதை 1941இல்,”கச்சதேவயானி” என்ற பெயரில் படமாக வெளி வந்து வெற்றிகரமாக ஓடியது.

நடித்தவர்கள்—கொத்தமங்கலம் சீனு,டி.ஆர்.ராஜகுமாரி
....................................

அப்பு:அண்ணே !தேவயானியை அமெரிக்காவில கைது செஞ்சாங்களாமே.படப்பிடிப்பிக்குப் 
போயிருந்தாங்களா?

குப்பு: டேய் அது வேற தேவயானிடா.அங்க தூதரகத்தில அதிகாரி!

அப்பு:ஆமாண்ணே!அந்தக்காலத்துப் புராண இதிகாசங்களிலேயே சொல்லியிருக்கு, தூதர்களைக் கைது செய்யக் கூடாதுன்னு!

குப்பு:வெவரமாத்தான் பேசறே!இவங்க ஆதர்ஷ் ஊழல்ல மாட்டினவங்களாம்.

அப்பு:அடக் கடவுளே!இன்னும் அட்டையெல்லாம் கொடுத்தே முடியல்லை;அதுக்குள்ள அதில ஊழலா?

குப்புடேய்!அது ஆதார்டா!  
......................................
.....................................................

Wednesday, December 4, 2013

சாம்!கூரையின் உட்பக்கம் பெயிண்ட் அடிக்கணும்!-ராகமாலிகை



“Sam,the ceiling needs painting” என்ற புத்தகம் 1964 இல் வெளி வந்ததாம்;

வந்தபோது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதாம்,இப்போது அதெல்லாம் வெறும் ஜுஜுபி!

இநதப் பழைய புத்தகத்தை என்  நண்பர் ஒருவர் எங்கிருந்தோ வாங்கி வைத்திருந்து ஓரிரு ஆண்டுளுக்கு முன் என்னிடம் காட்டினார்.

மிகச் சிறிய புத்தகம்தான்.

மொத்தம் பத்துப் பன்னிரண்டு படங்கள். 

படங்களில் இரண்டு ஜோடிப் பாதங்கள் மட்டுமே. 

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பன்ச் லைன்! அவ்வளவே.

இதைப் பற்றி இங்கு என்னால் விளக்கமாகச் சொல்ல முடியாது.அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால் பார்த்துக் கொள்ளுங்கள்!

............................................................................................................. 

பழசு பழசுதான்!

கணினிகளின் வரவுக்குப்பின்,அந்தக்காலத்து டைப்ரைட்டரை ஓரங்கட்டி விட்டார்கள்..

இப்போது அதற்கும்  மறுவாழ்வு வந்திருக்கிறது.

ரகசியமான ஆவணங்கள்,கடிதங்கள் இவற்றைக் கணினியில் அடித்தால் அது திருடு போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால். லண்டன் இந்தியத் தூதரகத்தில் முக்கிய செய்திகளை இனி டைப்ரைட்டரில் அடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்களாம்!

(மறக்காமல் கார்பனை எரித்து விட வேண்டும்!)(

old is gold!---டைப்ரைட்டரைச் சொல்லவில்லை! செய்தியே கொஞ்சம் பழசுதான்!
.................................................................................................................

இந்தக்காலத்தில் சிவாஜியின் நடிப்பை மிகை என்று சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. வெறும் பாட்டை வைத்து ஓட்டிக் கொண்டிருந்த காலத்தில்,நடிப்பு என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவர் அவர்..கர்ணனில் சில இடங்களில் மிகையாகத் தோன்றலாம்.ஆனால் அந்தப் பாத்திரத்துக்கு அது தேவை.’பெக்கெட்’ என்றொரு படம்.அதில் பீட்டர் ஒ டூலின் நடிப்பைப் பாருங்கள்.மிகையென எண்ணுவீர்கள்.ஆனால் அது தேவை(இந்தியில் நமக்ஹராம்,தமிழில் உனக்காக நான்).