Thursday, January 31, 2013

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு?!



பத்திரிகையை எடுத்து முதல் பக்கத்தைப் பார்த்தான் அவன்.

கொட்டை எழுத்தில் செய்தி முன் நின்றது....

“அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு;படம் தடை செய்யப்படுமா?”

செய்தியின் சாராம்சம் இதுதான்.....

அந்தப் படத்தில் வரும் நாற்பது திருடர்களும் இஸ்லாமியர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதைச் சில அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இஸ்லாமியர்கள் அனைவரையும் திருடர்களாகக் காட்டும் ஒரு விஷமத்தனமான முயற்சி இது; எனவே படம் தடை செய்யப்பட வேண்டும்   என அந்த அமைப்புகள் போராட்டம் நடத்தி உள்ளன.

இது குறித்துத் தயரிப்பாளர் சொல்லும்போது “இது அரேபியாவில் நடக்கும் கதை எனவே அக்கதையில் உள்ளபடியே படம் எடுத்துள்ளோம்.நாங்களாக எதுவும் செய்யவில்லை;யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்குக் கிடையாது.” என்றார்

ஆனால் ஆர்ப்பாட்டக் குழுவினர் “கதை அரபுக்கதையாக இருந்தாலும்,படம் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கிறது.எனவே இஸ்லாமியர்களை இழிவு படுத்தும்படி எடுத்திருக்கக் கூடாது”என்று சொல்லியிருக்கின்றனர்.

இதன் காரணமாக படம் வெளியாவது தடைப் பட்டிருக்கிறது.

படத்தில் பெரும்பான்மை நேரம் திருடர்கள் வருவதால் அக்காட்சிகளை நீக்க முடியாது எனவே மாற்று வழி காண வேண்டும் என்ற நிலையில் மதசார்பற்ற நடுநிலையாளர்கள் சொல்லியிருக்கும் கருத்தாவது..”படத்தை வெட்டவோ, குறைக்கவோ வேண்டாம் .மாறாக இன்னும் கொஞ்சம் படம் எடுத்துச் சேர்க்கலாம்.திருடர்கள் இறந்தபின் ,கதாநாயகன் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர் போல் வேடம் அணிந்த இந்துக்கள் என்பதைக் கண்டு பிடிக்கிறான்!”

அதற்கு இந்துக்களிடமிருந்து எதிர்ப்பு வராதா என்று கேட்டதற்கு அவர்கள் பதில்....

“என்ன காமெடி பண்றீங்களா?!”
..........
முகத்தில் சில் என்று தண்ணீர்!
 
“விடிஞ்சு 3 மணி நேரம் ஆச்சு இன்னும் தூங்கறான் பார்.எந்திருடா!” அம்மாவின் குரல்..

பேப்பர் படித்துக் கொண்டே இரவு தூங்கியவன் கண் விழித்தான்….
 
எல்லாம் கனவா?!!

Wednesday, January 30, 2013

எங்கும் நிறைந்த ஊழல்?!



”காலை வணக்கம் டாக்டர்!நான் சொன்ன விஷயத்தை ………

“நான் யோசிச்சேன்.உங்க தயாரிப்பு தரமானதா இருந்தா நிச்சயம் வாங்கலாம்”

”ரொம்ப சந்தோஷம் டாக்டர்!இப்ப உடனடியா எத்தனை  ஸ்டென்ட்  வேண்டியிருக்கும்?”

‘நான் ஒரு மாதத்தில் குறைந்தது ஐந்து ஆஞ்சியோப்லாஸ்டியாவது செய்கிறேன்.எனவே நிச்சயம் ஐந்தாவது வேண்டும் மாதத்துக்கு.உங்க தயாரிப்பை வாங்கலாம்.ஒரு ஸ்டெண்டுக்கு எனக்கு ரூ.10000 கொடுத்து விடுங்கள்.

“மகிழ்ச்சி டாக்டர்.உங்கள் விருப்பப்படியே செய்து விடுகிறேன்.”

மூன்று மாதம் கழிகிறது.டாக்டர் 16 ஸ்டென்ட்கள் உபயோகப் படுத்தியிருக்கிறார்.

“என்ன மிஸ்டர்!16 ஸ்டென்ட்டுக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் எனக்கு வரணும்.இன்னும் வரவில்லை.இனிமேல் உங்க தயாரிப்பை நான் பயன்படுத்தமாட்டேன்”

“டாக்டர்.அப்படிச் செய்து விடாதீர்கள்!நான் உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்து விடுகிறேன்”

ஊழல் தடுப்புப் பிரிவுக்குப் புகார் போகிறது.

டாக்டர் கைது செய்யப்படுகிறார்.

இது கதையல்ல நிஜம்!ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல இதய நோய் மருத்துவர் சம்பந்தப் பட்ட நிகழ்வு இது!

ஒரு மருத்துவர் சொல்லியிருக்கிறார் தேவையே இல்லாமல் ,மருந்தினால் குணப்படுத்தப்படக் கூடிய நேரத்தில் கூட ஆஞ்சியோப்லாஸ்டி பலரால் சிபாரிசு செய்யப்படுகிறது என்று!

எங்கே இருக்கிறது மருத்துவப் பணியின்  ஒழுக்கவியல்?

ஒரு ஆண்டில் இந்தியாவில் மூன்று லட்சம் ஸ்டென்ட்டுகள் பயன் படுத்தப்படுகின்றன என்பது அதிகார பூர்வமற்ற தகவல்.



Tuesday, January 29, 2013

கேஸ் சிலிண்டரும் அவியலும்!


சமையல் கேஸ் சிலிண்டருக்கு முடிவுறு தேதி உண்டா?

நிச்சயமாக உண்டு!

காலாவதியான சிலிண்டர்கள் பாதுகாப்பானவை அல்ல;அவற்றால் விபத்துகள் நேரலாம்!

முடிவு தேதியை எப்படித் தெரிந்து கொள்வது?

சிலிண்டரில் மேலே மூன்று பட்டையான பாகம் இருக்கும்.

அவற்றில் ஒரு பட்டையின் உள் புறம் இந்தத் தேதி  குறிக்கப்பட்டிருக்கும்.

எப்படி—உதாரணம் C12.

இதன் பொருள் என்ன?

A என்பது மார்ச்.
B என்பது ஜூன்
C என்பது செப்டம்பர்
D என்பது டிசம்பர்

அதாவது இந்த சிலிண்டர் செப்டம்பர் 2012 உடன் காலவதியாகி விட்டது என்று பொருள்.

சிலிண்டர்  வாங்கும்போது இதையும் சரி பார்த்து வாங்குவது பாதுகாப்பானது!

………………………………………………………..

அவியல் பிறந்தது எப்படி?

பீமனுக்கு விடம் கலந்த உணவைக் கொடுத்துக் கௌரவர்கள் அவனைக் கொன்று நதியில் எறிந்து விடுகிறார்கள்.

அங்கு அவன் நாகலோகம் சென்று அவர்களால் காப்பாற்றப் பட்டு மீண்டும் வருகிறான்.

பீமன் இறப்பைக் கொண்டாட ஒரு விருந்து வைக்க துரியோதனன் முடிவு செய்து ,அதற்காக அநேக காய்கறிகள் வாங்கி வைத்திருக்கிறான்.

பசியுடன் வந்த பீமன்-அவனுக்குச் சமைக்கத்தெரியும்-எல்லாக் காய்கறிகளையும் வெட்டிப் போட்டு ஒரு பதார்த்தம் செய்தான்.

அதுவே முதல் அவியல்!


Monday, January 28, 2013

விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!



என்ன துணிச்சல் உங்களுக்கு கமல் சார்?......தொழில் நுட்பத்தில் சிறந்த ,அழுத்தமான கதைக்கருவைக் கொண்ட தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு படத்தை,யார் உணர்வும் உண்மையாகப் புண்படா வண்ணம் எடுப்பதற்கு!

நடந்து தேய்ந்த பழைய பாதையில் சென்று மசாலா படங்களை எடுக்காமல் ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களை எடுத்தமைக்காக நீங்கள் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்தான்!

அதுவும் உங்கள் பணத்தை முதலீடு செய்து? நம்பமுடியாத செயல். வருந்தி உழைத்துத் தேடிய இந்தப் பணத்தை நிலத்திலோ,தங்கப் பத்திரங்களிலோ அல்லது அதனினும் மேலாக ஒரு அரசியல் கட்சி துவங்குவதிலோ செலவு செய்திருக்கலாம் எனத் தெரியாதா? எங்கு சம்பாதித்தேனோ அங்குதான் செலவு செய்வேன் என்று  இருப்பது முட்டாள்தனம் இல்லையா?!

ஆக்க பூர்வமாக,தனிச் சிறப்பாகச் சிந்திக்க என்ன துணிச்சல்!கடந்த 51 ஆண்டுகளாக எங்களையெல்லாம் மகிழ்வித்து,அழ,சிரிக்க வைத்து எங்கள் வாழ்க்கையின் அங்கமாகப் போயிருக்கிறீர்கள்;இதற்காகவே நீங்கள் தண்டிக்கப் பட வேண்டும்!

கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

‘ஹே ராம்’ என்றொரு படம்! மஹாத்மாவுக்கு தமிழ் சினிமாவின்  யாவுங்கடந்த பாராட்டாக அமைந்தது.ஆனால் படம் வெளியாகும் முன்பே ஒரு காந்தி வெறுப்பாளர் என முத்திரை குத்தப் பட்டீர்கள்!

மரணதண்டனையைக் குறித்து விருமாண்டி என ஒரு இணையற்ற படம் எடுத்தீர்கள் ஆனால் படத்தின் பெயர்ச் சிக்கலில் நீதிமன்றத்துக்கு அலைந்தீர்கள்!

தசாவதாரம் என்றொரு படம்.விளம்பரங்களைப் பார்த்தே படத்தைப்பற்றித் தவறாகப் புரிந்து கொண்டவர்களால்,இந்துமத விரோதி என அழைக்கப்பட்டீர்கள்!

இனியாவது இப்படிப் படம் எடுப்பதை நிறுத்தக்கூடாதா?!

உங்களுக்கும் உங்களைப்போன்ற பட உலகில் உள்ள சிறந்த படைப்பாளிகளுக்கும் ”உங்கள் உடல் நலம்,மனநலம்,வாழ்வு இவற்றில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் சிறந்த படைப்புகள் தருவதை நிறுத்துங்கள்” என்று ஒரு பாடம் புகட்டுவதற்காகவாவது ..........

விஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்!

 (behind woods.com  என்ற தளத்தில் இந்திராணி நாராயண் என்பவர் எழுதிய   ங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்)

Sunday, January 27, 2013

சண்டேன்னா ஒண்ணு!

ஒரு தமிழ்ப் பாதிரியார் கேரளாவில் ஒரு சர்ச்சில் பணியில் சேர்ந்தார்.

போய்ச் சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் காலை  தன் அறைச் சாளரத்தின் வழியாகெளிய  பார்த்தார்.

அவரது இருப்பிடத்தின் நுழை வாயிலில் ஒரு கழுதை செத்துக் கிடந்தது.

உடனே அவர் நகராட்சிக்கு தொலை பேசியில் தகவலைச் சொல்லி விரைவில் அதை அகற்ற ஏற்பாடு செய்யச் சொன்னார்.

பாதிரியார் தமிழர் எனப் புரிந்து கொண்ட அந்த ஊழியர், அவரைக் கிண்டல் செய்ய எண்ணி”அச்சன்!இது நாள் வரை இறுதிச் சடங்குகளைச் செய்வது பாதிரியார் என்றுதான் எண்ணியிருந்தேன்” என்றார்.

பாதிரியார் யோசித்தார்.

பின் சொன்னார்”நீங்கள் சொல்வது சரியே.ஆனால் இறந்தவர் களின் நெருங்கிய சொந்தக் காரருக்கு உடன் தகவல் சொல் வதும்  எங்கள் கடமை!எனவேதான் இந்த தொலைபேசி உரையாடல்!”

ு எப்ி இருக்கு!