Friday, January 25, 2013

அம்மா போல் ஒரு மனைவி!



என் சமையலில் சுவையே இல்லை

குழம்பில் மணமில்லை,கூட்டில் ருசி இல்லை

பொரியலில் உயிரில்லை,சட்னியில் காரமில்லை

இட்லியில் மென்மையில்லை,தோசை முறுகலில்லை

அவர் அம்மா கைப் பக்குவம்  அடியோடு இல்லை.

அம்மா போல் துணி மடிக்கத் தெரியவில்லை

அழகாகப் பேசத் தெரியவில்லை

இல்லை,இல்லை,இல்லை,இல்லை

எல்லாமே அவர் சொன்ன சொற்கள்!

பொறுக்கவில்லை,விட்டேன் ஒரு அடி

அவர் அம்மா அடி போலவே இருக்கிறதாம்!

                           .............   நொந்துபோன ஒரு மனைவி!


5 comments:

  1. சரி சரி.... இன்னிக்கு அடி உண்டு! :)

    ReplyDelete
    Replies
    1. பாவம் சார் நீங்க!
      நன்றி

      Delete
  2. ஹா.. ஹா.. ஹா...

    குட்டன் ஐயா பதிவு நகைச்சுவையுடன் கூடிய அருமை.
    அதைவிட... முன்னிருக்கும் பின்னோட்டம் சூப்பர்ங்க.
    த.ம.3

    ReplyDelete
  3. தாய்க்குப் பின் தாரம் என்பது சரி தான் போல் இருக்கிறது!

    ReplyDelete