அனிச்சமும்
அன்னத்தின் தூவியும்
மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்-- குறள் 1120 (நலம் புனைந்துரைத்தல்)
அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சி முள் போன்றவை.
மிக மென்மையான அனிச்ச மலரும் அன்னத்தின் சிறகுமே மாதர் அடிக்கு நெருஞ்சி முள் போல் துன்பம் தருவன என்றால் ,அப்பாதங்களின் மென்மையை என்னென்று சொல்வது?!
“பஞ்சு கொண்டொற்றினும் பைய,பைய என்று
அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”--சிலப்பதிகாரம்
(மீள் பதிவு,சில திருத்தங்களுடன்!)







