Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Monday, September 30, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-2 -(7)



                                                                      அனிச்சமும்

                                                          அன்னத்தின் தூவியும்



                                                       மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்

                         அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
                         அடிக்கு நெருஞ்சிப் பழம்--     குறள் 1120   (நலம் புனைந்துரைத்தல்)

அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சி முள் போன்றவை.

மிக மென்மையான அனிச்ச மலரும் அன்னத்தின் சிறகுமே மாதர் அடிக்கு நெருஞ்சி முள் போல் துன்பம் தருவன என்றால் ,அப்பாதங்களின் மென்மையை என்னென்று சொல்வது?!

   “பஞ்சு கொண்டொற்றினும் பைய,பைய என்று
    அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”--சிலப்பதிகாரம்

(மீள் பதிவு,சில திருத்தங்களுடன்!)


Saturday, September 28, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-6

                
                         தேய்ந்து வளர்ந்து மீண்டும் தேய்ந்து...................நிலாவின் நிலை!
                                                          களங்கங்களுடன் !

                                                              அழகிய பெண்
                                                    மாசு மருவற்ற முகப் பொலிவு!
                                             

         ” அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
            மறுவுண்டோ மாதர் முகத்து”---திருக்குறள்-1117

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்  உள்ளது போல் இந்த மாதர் முகத்தில்களங்கம் உண்டோ ?இல்லையே!

உண்மைதானே!
"நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்"(நா.பா-குறிஞ்சி மலர்)

"கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்”(நாமக்கல் கவிஞர்)




Friday, September 27, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்!

                                                                     கூற்றுவன்


                                             பெண்ணின் அழகிய கண்கள்



                                         பெண்மான்


         ”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
         நோக்கம்இம்  மூன்றும் உடைத்து” -திருக்குறள் -1085

எமனோ?கண்ணோ?பெண்மானோ?இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

ஆம்!
        பாயும் மான் போல் பார்வை!
       அப்பார்வையே நம்மைக் கொல்லும்!
       அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?!