Wednesday, November 28, 2012

வஞ்சிக்கப்பட்ட வஞ்சி!!



”அழகாய் இருந்தாள்;அருகில் சென்றேன்
     
         யார் எனக்கேட்டேன்;வஞ்சி என்றாள்

பழகினோம்  நெருங்கி ;காலம் நகர்ந்தது
       
       விட்டு விலகினேன் .மறந்து சென்றேன்

தவறென்ன என்மேல்?சொன்னதைச் செய்தேன்!
    
        வஞ்சி என்றாள் அவள்;வஞ்சித்தேன் நான்! ”   (குட்டன்)


இதோ இது பிறக்கக் காரணமான யாப்பருங்கலக்காரிகைப் பாடல்--

“வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் நானுமவன்
 வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
 வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
 வஞ்சியாய் வஞ்சியர் கோ!”

தலைவி தோழியிடம் சொல்கிறாள்”தோழிப்பெண்ணே!அவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்று  தன் ஊரைச் சொன் னான்.

நானும் அவன் வஞ்சிக்க மாட்டேன் எனச் சொல்கிறான் 

என்றெண்ணிச் ம்மித்ேன்.

 அ
ந்த வஞ்சி நாட்டுத் தலைவன்,வஞ்சியேன்,வஞ்சியேன் 

என்று சொல்லியும் என்னை வஞ்சித்து விட்டான்.(போனவன் 

இன்னும் திரும்பி வில்லை!”)




இப்பாடலில் அவன் வஞ்சியேன் எனச் சொன்னான்;ஆனால் வஞ்சித்தான் !

என் பாடலில் அவளே வஞ்சி என்று சொல்லி விட்டாள்! எனவே வஞ்சித்தேன்!

தமிழ் வாழ்க!

9 comments:

  1. நல்லாத்தான் யோசிக்கறீங்க! :)))))

    ReplyDelete
  2. அறியாத அருமையான பாடல்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. நல்லதொரு பாடல் + சிந்தனை...

    நன்றி...
    tm5

    ReplyDelete
  4. தமிழ் சொற்கள் விளையாடும் இதுபோன்ற பாடல்களை மேலும் பதிவிட வேண்டுகிறேன். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறப்பு..கவர்ந்தது..

    ReplyDelete
  6. வஞ்சியை வைத்தே வார்த்தை விளையாட்டு !

    ReplyDelete
  7. நல்ல தமிழ் விளையாட்டு.
    ரசிக்க முடிந்தது. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete