Tuesday, June 4, 2013

ஒரு நொடி சபலம்!ஒரு நொடி இன்பம்!!



சிவராமனுக்குப் பார்க்கப் பார்க்க ஆசை அதிகமானது.

என்ன கலர்!

என்ன அழகு!

உடல் பரபரத்தது.

எத்தனை நாள் ஆச்சு?

இந்த சுகம் மறந்தே போச்சு.

இன்று வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

கல்யாணி வேறு ஊரில் இல்லை.

ஆனாலும் ஒரு தயக்கம்.

இந்த வயதில் இது தேவையா?

ஏதாவது நோய்,கீய் வந்து தொலைத்தால்?

தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டார்.

எல்லோருக்கும் நோய் வருகிறதா என்ன?

அவரவர் தலை விதி.

துணிந்து விட வேண்டியதுதான்.

கல்யாணிக்குத் தெரிந்து விட்டால்?

அவள் கிடக்கிறாள் கிழவி!

முடிவுக்கு வந்தார்.

சுற்றும் முற்றும் பார்த்தார்.

அருகில் சென்றார்

“ஒரு பஞ்சு மிட்டாய் கொடப்பா”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

33 comments:

  1. ஹா...ஹா...

    குட்டன் = குசும்பு... ?

    ReplyDelete
  2. அப்படியே எனக்கும் ஒரு பஞ்சு மிட்டாய்....

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பையன் பஞ்சு மிட்டாய் சாபிடுவதில் தப்பே இல்லை!
      நன்றி

      Delete
  3. ஓ! பஞ்சு மிட்டாயா?
    எங்க நெஞ்செல்லாம் பதறிடுச்சுங்க

    ReplyDelete
    Replies
    1. பஞ்சு மிட்டாய் போல் நெஞ்சு உங்களுக்கு!
      நன்றி கோகுல்

      Delete
  4. 'இளைஞர்களுக்காக, இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!' என தலைப்பில் சொல்லிவிட்டு வயதானவர்களுக்கான(!) பதிவுகளை தருகிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. முதியவரைப் பற்றியது;ஆனால் இளைஞர்களுக்கானது!
      நன்றி சார்

      Delete
  5. அட! இவ்வளவுதானா!

    ReplyDelete
  6. Replies
    1. ம்..ம்...
      நன்றி ராஜசேகர்

      Delete
  7. என்னா ஒரு வில்லத்தனம்

    ReplyDelete
    Replies
    1. :-))
      நன்றி சக்கரக் கட்டி

      Delete
  8. பழைய குமுதம் ஒரு பக்கக்கதையை நினைவுபடுத்துகிறது.. அருமை குட்டன்...

    ReplyDelete
  9. உங்க வார்த்தை (சித்து) விளையாட்டை மீண்டும் தொடங்கிவிட்டீர்களே. அருமை.

    ReplyDelete
  10. குட்டன் ஐயா...
    வயசாயிட்டா இப்படியெல்லாம் எழுத தோன்றுமா...?

    இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. //வயசாயிட்டா இப்படியெல்லாம் எழுத தோன்றுமா...?//

      என்னையா சொல்கிறீர்கள்? அநியாயம்!
      நன்றி அருணா செல்வம்!

      Delete
  11. இன்று முகபுத்தகத்திலும் யாரோ இதை பகிர்ந்திருந்தார்கள்.நல்ல கற்பனை

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!
      நன்றி டினேஷ் சுந்தர்

      Delete
  12. குட்டன் = குசும்பு.....

    சரிதான்.....

    ReplyDelete