Tuesday, March 25, 2014

சில்லுன்னு ஒரு பீர்!

  
                               ஹப்பா!என்ன வெய்யில் என்ன வெய்யில்!
 
பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா?  பீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் " பீலா " இல்லை. 

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை வேளச்சேரி மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.

1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைகிறது. உண்மை 

பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.

2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.

1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் 
பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.


3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)


4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 
இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.


5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)

பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம், செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.


6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.


7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.

2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .


8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.

மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன  This is from Beer Net Publication, April 2001 Biological Institute.


9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)

லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.


10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.
 
டிஸ்கி: இதெல்லாம் நான் சொல்லல்லீங்கொ! பிரபல பதிவர் ஒருவரின் ,சூரியனுக்கு உகந்த ரத்தினப் பதிவரின் வலைப்பூவிலிருந்து cp பண்ணினதுங்கோ!
 
குடி குடியைக் கெடுக்கும்,குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்!

18 comments:

  1. //குடி குடியைக் கெடுக்கும்,குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்!//
    சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு இது வேறா!

    ReplyDelete
    Replies
    1. விக்கிற அரசே அதைத்தானே செய்கிறது?!
      நன்றி

      Delete
  2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு ,

    ReplyDelete
  3. rum என்பதைக்கூட Routine Utility Medicine என்றுகூட குடிகாரர்கள் சப்பைக் காட்டு கட்டுவார்கள் !எதையோ ஏன் மிதிக்க வேண்டும் ,அப்புறம் ஏன் தண்ணியை தேடி அலையணும் ?
    த ம 2

    ReplyDelete
  4. முக்கியமா பீர் குடித்தால் , அரசு கஜானா நிரம்பி வழியும் , அப்படியே இலவசங்களும் கிடைக்கும் :)

    ReplyDelete
  5. இவ்வளாவு நன்மை இருக்குறதாலதான் அரசாங்கமே தெருவுக்கு நாலு கடை திறந்திருக்குப் போல!

    ReplyDelete
  6. நமக்கும் இந்த பதிவுக்கும் தூரம் அதிகம்! எஸ்கேப்!

    ReplyDelete
    Replies
    1. குடிக்க வேண்டாம்;சும்மாப் படிக்கலாமே
      நன்றி

      Delete
  7. அப்போ பீர் குடிக்கலாமா, வர்றீங்களா குட்டன்?

    ReplyDelete
    Replies
    1. sheraton park?grand chola?park hyat?
      எங்கே?! ஹா ஹா ஹா!!!
      நன்றி

      Delete
  8. தில்லியில் வெயிலின் கொடுமை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது என யோசித்தேன். இங்கே இப்படி ஒரு பதிவு....

    கடைசி பஞ்ச் லைன்! :)

    ReplyDelete
    Replies
    1. அதான் முக்கியம்!
      நன்றி

      Delete
  9. பசங்க இப்படித் தான் ஆரம்பித்து சீரழிந்து போறாங்க...

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்கண்ணே!:))
      நன்றி

      Delete