Friday, March 23, 2012

பிலாசபி பிரபாகரனுக்கு வயசாயிப்போச்சா?!

ஏன் இப்படி ஒரு கேள்வி என்று யோசிக்கிறீர்களா?

ஒரு வலுவான காரணம் இருக்கிறது!

நேற்றைய ’என் விகடனி’ ல் வலையோசைப்பகுதியில், பிரபாகரனின் அறிமுகம். படத்துடன். பின் அவர் எழுதிய சில பதிவுகள்.

அவற்றில் ஒரு பதிவு என்னைத் திகைக்க வைத்தது!

“அங்கிள் இது லேடீஸ் டாய்லெட் “ என்ற பதிவு!

ஒரு பேரிளம்பெண் பிரபாகரனைப் பார்த்து ‘அங்கிள் ’  என்று அழைத்தாளென்றால்,அவருக்கு வயது என்னவாக இருக்கும்?! ஹி,ஹி.

எனவேதான் முதலில் கேட்ட கேள்வி!

பின்னர் சில நண்பர்களுடன் பேசிய பின் தேடுதலில் இறங்கினேன்.

ஒரு நண்பர் சொன்ன படி ஒரு பேச நினைக்கும் பதிவில் தேடினேன்.

மாட்டியது!

ஆம்!அந்தப் பதிவை எழுதியவர் சென்னைபித்தன் அவர்கள்!

விகடனில் வெளியான மற்ற இரு பதிவுகளும் அவருடை யவைதான்!

விகடனில் ஏதோ குழப்பம்.!

விளைவு!!

பிரபாகரனுக்கு வயசாகிப்போச்சு!

அடுத்ததாகப் பிரபாகரனின் பதிவைப்போட்டுச் சென்னைப் பித்தனை அறிமுகப்படுத்தினால் சரியாப்போச்சு!!

நல்ல கூத்து!

2 comments:

  1. இது நல்லாயிருக்கே?

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன் அவர்களே

    ReplyDelete