Sunday, March 17, 2013

சண்டேன்னா ஒண்ணு!



ஒரு முதியவர் தன்  முன்னிலைச் சுரப்பிச் சோதனைக்காக சிறுநீரக மருத்துவரிடம் சென்றார்

அவர் நண்பர்கள் சிலருக்கு அறுவை சிகிச்சை நடந்தது அவருக்குக் கவலையளித்தது.
  
மருத்துவ மனையின் காக்கும் அறையில் பலர் காத்திருந்தனர்.

வரவேற்பில் ஒரு பருத்த கடுகடு முகமுடைய ஒரு பெண் அமர்ந்திருந்தாள்

அவளிடம் சென்று அவர் தன் பெயரைச் சொன்னார்.

அவள் பெரிதாக எல்லோருக்கும் கேட்கும்படிச் சொன்னாள்”உங்கள் பெயர் பதிவாகி யிருக்கிறது; ஆண்மைக் குறைபாட்டைச் சரி செய்ய வந்திருக்கிறீர்கள் இல்லையா?”

காத்திருந்த அனைவரும் அவரையே பார்த்தனர்

அவருக்கு மிக அவமானமாக இருந்தது.

யோசித்தார்.

பின் அவரும் அந்தப் பெண் போல் உரக்கச் சொன்னார்”இல்லை,இல்லை!நான் பால் மாற்று அறுவைச் சிகிச்சை பற்றித் தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன்.ஆனால் உனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வேண்டாம்”

காத்திருந்த அனைவரும் கை தட்டினர்!

முதியவர்களிடம் மோதாதீங்க?!

8 comments:

  1. சில பேர் இப்படித்தான் வாய் குடுத்து மாட்டிக்குவாங்க

    ReplyDelete
  2. ஏளனம் வேண்டாம்... யாரிடமும் மோதலும் வேண்டாம்...

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா குட்டன் குசும்பா

    ReplyDelete
  4. அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்காமல் சரியான பதிலடி கொடுத்தார்.

    ReplyDelete
  5. இதைத்தான் தடி கொடுத்து அடி வாங்குதல் என்பார்கள்!

    ReplyDelete