Monday, May 20, 2013

ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருந்தால் என்ன செய்வார்கள்?!

கொஞ்சம் விவகாரமான கேள்விதான்.

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால்,காமம் மேலிட்டு உடல் உறவில்தான் ஈடுபடு வார்களா?

ஆண்-பெண் உறவு என்பது வெறும் உடல் சார்ந்ததுதானா?

ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஒருவர் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

உயர்நீதி மன்றம் இக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது..

இந்த நேரத்தில் என் வழக்கறிஞர் நண்பர் ஒருவர் ஒரு முறை தெரிவித்த தகவல் நினைவுக்கு வருகிறது.

ஒரு விவாக ரத்து வழக்கில், கணவன் மனைவியின் நடத்தை சரியில்லை என்ற வாதத்தில், கணவன் தன் மனைவி ஒரு சாத்திய அறையிலிருந்து ஒரு ஆடவனுடன் வெளியே வந்ததைப் பார்த்ததாகச் சொல்ல,நீதிபதி கேட்டாராம்”அறைக்குள் அவர்கள் தவறான நடவடிக் கையில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று எப்படிச் சொல்வீர்கள்” என்று.

ஆம்.

சட்டம் எப்போதும் பெண்களின் பால் சிறிது இரக்கத்துடன்தான் நடந்து கொள்கிறது--அவர்கள் வலுவற்றவர்கள் என்பதால்.

காவல் துறைக்கு வரும் புகார்களைப் பாருங்கள்

கணவனால்,அவன் பெற்றோரால் துன்பப்படும் பெண்களின்  கதைகள்தான் தெரியும்.

மருககளால் கொடுமைப் படுத்தப் படும் மாமியார்,மாமனார்கள் இல்லையா?

மனைவியால் துன்புறும் கணவர்களே இல்லையா?

குடும்பத்தில் வன்முறையென்பது உடல் சார்ந்தது மட்டுமா?

உளம் சார்ந்த வன்முறை கிடையாதா?

மனைவியின் நடத்தையால் ,குத்தலான பேச்சால்,அலட்சியப் போக்கால் ,கவனிப் பின்மையால்  உள்ளத்தளவில் வன்முறைக்காளாகி நொந்து போகும் கணவர்கள் இல்லையா?

இன்றைய செய்தி ஒன்று.

திருவள்ளூர் அருகே ஒரு இடம்.

பேத்தி குளிக்கும்போது தண்ணீரை வாரி இறைத்து  ஈரமாக்கியதற்காக  பாட்டி கடிந்து கொள்கிறாள்.

தன் மகளைச் சொன்னது மருமகளுக்குப் பிடிக்கவில்லை

சண்டை பிடிக்கிறாள்.

சண்டையின் முடிவில்  மருமகள் காவல் துறையில் புகார் கொடுக்கிறாள்...  தன் மாமனார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக!

விளைவு....... அந்த வயதான  தம்பதி-மாமனார்&மாமியார்-தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சட்டம்,சமூகம் காட்டும் இரக்கத்தைத் தவறாக்கப் பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்

எனக்கு ஒரு கதை தெரியும்.

ஒரு அன்பான கணவனின் கதை.

மனைவிக்கு அளித்த சுதந்திரத்தை அவள் தவறாகப் பயன்படுத்த அதனால் வாழ்க்கை சிதைந்து போனவன்.

அவன் நல்லூழ்,தெய்வஅருள் காரணமாக சிக்கல் எதுவுமின்றி மணவிலக்குப் பெற்று,ஒரு சந்நியாசி போல் வாழ்பவன்.

 அதை தொடர் பதிவாகத் தரலாம்;

ஆனால் ஏனோ தயக்கமாக இருக்கிறது.

பார்க்கலாம்!




24 comments:

  1. True kuttan. I also know a poor husbanf like u mentioned. Pl write. Tks.

    ReplyDelete
    Replies
    1. முயல்வேன் கணேஷ் ஐயா
      நன்றி

      Delete
  2. சட்டம் பெண்கள் மீது அதிகமாகவே இரக்கம் காட்டுகிறது என்பது உண்மையே....

    ReplyDelete
  3. //சட்டம்,சமூகம் காட்டும் இரக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்.//

    உண்மைதான். என் செய்ய?

    ReplyDelete
  4. சட்டம் மட்டுமல்ல சமூகமும் அதிகம் விட்டுக்கொடுக்கிறது.ஒரு பெண் ஆணின் மீது தவறி விழுந்தால் அது தவறுதலாக நடந்த விடயம் ஒரு ஆண் பெண் மீது தவறி விழுந்தால் அது பாலியல் சேட்டை.சுற்றி இருக்கும் ஆண்கள் விழுந்தவனை போட்டு உழக்கி விடுவார்கள் நாளைக்கு இது தமக்கும் நடக்கும் என்று தெரியாமல்.ஒரு ஆண் செய்யும் தவறால் அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள்

    ReplyDelete
  5. உண்மையான கருத்துக்கள்! பாவப்பட்ட ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. சட்டம் பெண்களுக்கு வளைந்து கொடுக்கிறது.. உண்மையே...

    ReplyDelete
  7. எல்லா பிரச்சனைகளுக்கும்
    இரண்டு நிலைகள்
    விதிவிலக்கான ஒன்றிரண்டு
    நிகழ்வுகளைக் கொண்டு
    ஒரு பொதுவான முடிவுக்கு வருவது கூட
    சரியா என்பது கூட யோசிக்கவேண்டியதே

    ReplyDelete
  8. சிந்திக் வைக்கிறது!

    ReplyDelete
  9. பெண்களுக்கு ஆதரவு தருவோர் ஆண்களை மட்டும் அவஸ்தை பட வைப்பதேன்

    ReplyDelete
  10. ஊட்டுல பெர்மிசன் வாங்கி தானே எழுதினீங்க...-:)

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிந்தவர் நீங்கள்!!
      நன்றி ரெவெரி

      Delete
  11. பத்துமணி நேரமா நானும் ஒரு பெண்ணோடுதான் பணி செய்கிறேன், ஆனாலும் எந்த எண்ணமும் மனதில் வருவதில்லை ஒரு நல்ல தோழியாகவே தெரிகிறாள்.

    ReplyDelete
    Replies
    1. அதுவே இயல்பான நிலையும்!
      வருகைக்கு நன்றி

      Delete
  12. நிஜம் தான் சட்டம் அதிகம் பெண்கள் பக்கமே!

    ReplyDelete
  13. சமிபத்தில் வெளி வந்த சூது கவ்வும் படத்தில் கூட, ஆண் மீது ஒரு பெண் பழி சுமத்துவது போன்ற காட்சி வந்தது. சட்டங்கள் என்றுமே பெண்கள் பக்கமே.
    இருப்பினும் மிருகத்தனமாக இருக்கும் சில ஆண்களை நாம் விட இயலாது.

    ReplyDelete