Tuesday, April 28, 2015

ஹையோ ஹையோ!

தந்தை தன் ஐந்து வயதுப் பெண்ணுக்குக் கதை சொல்லி விட்டு,அவளைப் பிரார்த்தனை செய்தபின் தூங்கச் சொன்னார்.

அவள் பிரார்த்தனை முடிவில்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற் றட்டும்; பாட்டியைக் காப்பாற்றட்டும்;தாத்தாவை வரவேற்கட்டும்”என்றாள் .

தந்தை ஏன் அவ்வாறு சொல்கிறாய் எனக்கேட்க,என்னவோ சொல்ல வேண்டும் எனத் தோன்றியது என்றாள்.

மறுநாள் தாத்தா இறந்து போனார்

சில மாதங்களுக்குப்பின் ஓர் இரவு பிரார்த்தனைக்குப் பின்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவைக் காப்பாற்றட்டும்;பாட்டியை வரவேற்கட்டும்”என்றாள்

மறுநள் பாட்டி இறந்துபோனாள்

அப்பா எண்ணினார் இவளிடம் அபூர்வ சக்தி இருக்கிறது

நாட்கள் நகர்ந்தன.

ஓர் இரவில் அவள் பிரார்த்தித்தாள்”கடவுள் அம்மாவைக் காப்பாற்றட்டும்;அப்பாவை வரவேற்கட்டும்”

தந்தைக்கு தூக்கி வாரிப் போட்டது.

அப்படியானால் மறுநாள் தான் சாகப்போகிறோமா?

காலை மிகச் சீக்கிரமே அலுவலகம் சென்று விட்டார்

அன்று அச்சத்துடனே செயல் பட்டார்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை.


நெஞ்சை அடைப்பது போல் இருந்தது

தண்ணீர் குடித்தார்.

காய்ச்சல் வருவது போல் இருந்தது

மாத்திரை போட்டுக் கொண்டார்

எப்படியாவது நள்ளிரவு கடந்து விட்டால் போதும்

அதுவரை அலுவலகத்திலேயே இருந்து விட முடிவு செய்தார்.

அன்றைய பொழுது நரக வேதனைதான்.

நள்ளிரவு கடந்தது.

ஒரு நிம்மதி மூச்சு விட்டுப் பின் வீடு திரும்பினார்.

மனைவி கேட்டாள் ”வேலை மிக அதிகமா/”

அவர் சொன்னார்”என் வாழ்க்கையிலேயெ இது போன்ற மோசமான நாள் இருந்ததில்லை.”

மனைவி சொன்னாள்”எனக்கு மட்டும் என்ன?இங்கே ஒரே பிரச்சினை.தபால் கொடுக்க வந்த தபால்காரர் மாரடைப்பில் நம் வீட்டுப் படியிலேயே இறந்து விட்டார்!”

7 comments:

  1. உங்கள் குறும்புக்கு அளவே இல்லையா??

    ReplyDelete
  2. தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது அருமை குட்டன்ஜி வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
  3. அட கொடுமையே! பாவம் டாடி!

    ReplyDelete
  4. கொஞ்சம் பழைய கதைன்னாலும் ஹிஹிஹி

    ReplyDelete
  5. குட்டனின் எல்லையிலா குறும்பு! ரசித்தேன் ஐயா!

    ReplyDelete
  6. குறும்புதான் ரசித்தேன்.

    ReplyDelete
  7. ஹஹஹஹஹ்...இந்த ஜோக்கை வேறு விதமாகக் கேட்டிருக்கிறோம்...

    ReplyDelete