Showing posts with label வடகிழக்குப் பருவ மழை. Show all posts
Showing posts with label வடகிழக்குப் பருவ மழை. Show all posts

Tuesday, August 18, 2015

புயல் சின்னம் உருவாகி விட்டது! அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.நவம்பர் மாதங்கள் வடகிழக்குப் பருவ மழைக் காலங்கள். வங்காள விரிகுடாவில்.குறைந்த காற்றழுத்தம்,காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகிப் புயலாக மாறி நம்  வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்குத் தலைவலி கொடுப்பது வழக்கம். முதலில் சென்னயைத் தாக்கும் என்பார்கள். பின்னர் நெல்லூரைத் தாண்டி என்பார்கள்; கடைசியில் அது ஒரிசாவைத் தாக்கும்.

இம்முறை இப்போதே புயல் சின்னம் உருவாகி விட்டது.அது எங்கு தாக்கும் என்பதும் துல்லியமாகத் தெரிந்து விட்டது;ரமணன் அவர்களின் அறிவிப்பின்றி!

ஆம் புயல்,புதுக்கோட்டையைத் தாக்கப் போகிறது.சரியாக அக்டோபர் மாதம் 11ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. 

ஆனால் இப்புயல் சேதப்படுத்தாத புயல்;மகிழ்ச்சி தரும் புயல்;அனுபவப் புயல்; இலக்கியப் புயல்; பல்சுவைப் புயல்.

புயலின் பிரம்மாண்டம் இப்போதே தெரியத் தொடங்கி விட்டது.நாள் நெருங்க நெருங்க இதன் வலிமை புலப்படும்.இது ஒரு புயலல்ல;பல புயல்களின் சங்கமம்.

இப்புயலுக்கு வலிமை சேர்க்கப்போகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள லாம். இப்புயலின் தாக்கத்தில் அமிழப்போகிறவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

மென்மேலும் இப்புயலுக்கு எவ்வாறு வலிமை சேர்க்க முடியும்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!

ஒலிக்கட்டும் வெற்றி முரசு!