Wednesday, April 24, 2013

கஸாலி இயக்கும் படம்!

”சாய்ந்தாடு  சாய்ந்தாடு” என்ற தமிழ்ப் படம்

ஷிபானி காஷ்யப் என்ற மும்பைக் குயிலை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர்.

யார் இயக்குநர்?

.............கஸாலி!.......!

நம்ம ரஹீம் கஸாலியா?!:))

சொல்லவே இல்ல?!

(இது வேறு யாரோவாம்!)

....................................................................

கேரளாவில் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு கோடிப் பணம் விழுந்ததாம்.

ஆனால் அப்பணத்தை வாங்கி அனுபவிக்காமல் அவர் ஒரு விபத்தில் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

பாவம்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதைதான்!

எனக்கு ஒரு சந்தேகம்...

அந்தச் சீட்டை அவரது வாரிசுகள் கொடுத்துப் பரிசுத்தொகையைப் பெற முடியுமா?

யாராவது சொல்லுங்கய்யா!

இல்லாட்டி என் மண்டையே வெடிச்சிடும்!

..............................................................

சமீபத்தில் படித்த இரு செய்திகள்.

இந்திய கப்பற்படையில் அதிகாரிகள் தங்கள் மனைவிகளைப் பறிமாற்றம் செய்து கொள்வார் களாம்!

இது ஒரு அதிகாரியின் மனைவியே வெளியிட்ட தகவல்.

அடுத்த செய்தி...

இதுவும் ஒரு பரிமாற்றம்தான் !

இரு ஆண்கள் மாற்றுச் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டனர்.

அவரவர் மனைவியே தன் கணவனுக்குச் சிறுநீரகம் தரத் தயாராக இருந்தனர்.

ஆனால்,அவர்களின் ரத்தப்பிரிவு,மற்றும் திசுக்கள் கணவருக்குப் பொருந்தவில்லை.

என்ன செய்வது?

மருத்தவர்கள் கண்ட ஒரு அதிசய ஒற்றுமை.....ஒரு மனைவியின் ரத்தம்,திசுக்கள் அடுத்த கணவருக்குப் பொருத்தமாக இருந்தன,இரண்டு  தம்பதிக்கும்!

நிலைமையை எடுத்துக் கூறியதும் இரு மனைவியரும் ஒத்துக் கொண்டனர் தங்கள் சிறுநீரகத்தை மற்றவள் கணவனுக்குத் தருவதற்கு !

முதல்  பரிமாற்றம்  வெட்கக் கேடு!

இரண்டாம் பரிமாற்றம்  வாழ்த்துப் பாடு!

..............................................
மாற்றுச் சிறுநீரகம் பற்றிப் பேசும்போது சுஜாதாவின் ”காகிதச் சங்கிலிகள்  ” பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.இக்கதை ”பொய்ம்முகங்கள்” என்ற பெயரில் திரைப்படமாக வந்தபோது முடிவை மாற்றிக் கதையின் அழுத்தத்தை இல்லாமல் செய்து விட்டார்கள்.

உண்மைதான்.உறவுகள் காகிதச் சங்கிலிகள்தான்.

ஆனால் தங்க நிறச் சரிகைக் காகிதத்தில் செய்த சங்கிலிகள்!

................................................


15 comments:

  1. நான்கு(ஐந்து?) தகவல்களை வழக்கம்போல் உங்கள் பாணியில் இரசிக்கும்படி தந்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

    யார் கண்டார்கள்? உங்கள் வாய் முகூர்த்தம் நண்பர் ரஹீம் கஸாலி
    அவர்களே வருங்காலத்தில் திரைப்படம் எடுக்கலாம்.

    கேரளாவில் இறந்துபோன அந்த அதிர்ஷ்டக்காரரின்(!) வாரிசுதார்கள் அவர் வென்ற லாட்டரி பணக்தைப்பெறலாம் என கேரள அரசின் அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.(இனி உங்களுக்கு மண்டைவெடிக்க சான்ஸே இல்லை!)

    ReplyDelete
    Replies
    1. ஹப்பா!தப்பிச்சேன்!
      வருகைக்கு நன்றி

      Delete
  2. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
    இப்படிக்கு
    தமிழ் களஞ்சியம்

    ReplyDelete
  3. செய்திகளுக்கு நன்றி...

    இரண்டாம் பரிமாற்றம் - வாழ்த்துப் பாடு...

    ReplyDelete
  4. ரைட்டுங்க...


    எல்லா தகவலுக்கும் ஐயா நடனசபாபதி பதில் சொல்லிட்டாரு....

    ReplyDelete
  5. தகவல்கள் கிடைக்க உதவினீர்கள் உங்கள் பதிவின் மூலம் என் மண்டையும் வெடிச் சிடுமில்ல

    ReplyDelete