Saturday, June 1, 2013

சென்னைப் பதிவர்கள் ’திடீர்’ சந்திப்பு!





இன்று மாலை சென்னையில் மழை மேகங்கள் திரளவில்லை.

ஆனால் சில பதிவர்களின் திடீர் சந்திப்பு ஒன்று நடந்ததாக நம்பத்தகுந்த 
வட்டாரங் களிருந்து தகவல் கிடைத் துள்ளது.

இன்று மாலை 4.30 மணி அளவில் தானைத் தளபதி புலவர் ஐயா தலைமையில் பதிவர்கள் கூடிப் பேசியதாக அறிகிறோம்!

பத்துப் பதினோரு பதிவர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது, முழுப் பட்டியலும் கிடைக்காத நிலையில் சிலரது பெயர்கள் கசிந்துள்ளது.

தற்போது ஓய்வு பெற்று விட்ட சென்னை பித்தன்,நகைச்சுவை வேந்தர் பால கணேஷ், நெத்தியடி சிவகுமார்(இவர் இல்லாத சந்திப்பும் உண்டா என்ன?!),க்ரைம் நாவல் புகழ் மதுமதி, இளைய புயல் சீனு……….மற்ற பெயர்கள் இன்னும் கிடைக்கவில்லை!

என்ன பேசினார்கள் என்பதும் விரைவில் தெரிய வரும்.

எனக்கு ஒரு வருத்தம்.

முன்பே தெரிந்திருந்தால் நானும் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டிருப்பேன்.

வாய்ப்பு நழுவி விட்டது.

பொறுத்திருப்போம்!

39 comments:

  1. முழு விவரம் விரைவில் அறிந்து வெளியிட வேண்டுகிறேன் குட்டன்...

    ReplyDelete
    Replies
    1. சென்னை பித்தன் ஐயாவின் பதிவில் பாருங்கள் பிரகாஷ்

      Delete
  2. சில நாட்களுக்கு முன் மதுமதி என்னுடன் பேசினார் சொல்லவே இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. இது திடீர் சந்திப்பு முரளிதரன்.
      அடுத்த சந்திப்பு வருகிறதாமே!

      Delete
  3. விரைவில் "இரண்டாவது பதிவர்கள் திருவிழா" என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம்.தெரிந்து சொல்கிறேன்

      Delete
  4. Visit : http://chennaipithan.blogspot.com/2013/06/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன்.
      நன்றி தனபாலன்

      Delete
  5. அந்தப் பதிவர் சந்திப்புக்கு நானும் சென்றிருந்தேன்... தெரியாதா?

    ReplyDelete
    Replies
    1. முதல் அறிக்கையில் முழு விவரம் கிடைக்கவில்லை.மன்னியுங்கள் ஸ்கூல்பையன்!
      நன்றி

      Delete
  6. நாள் முழுவதும் அலுவலகத்தில் சிக்கியதால் இந்த தீடீர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இல்லையெனில் என் பெயரும் உங்கள் பட்டியலில் வந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த சந்திப்பு ஞாயிறன்று இருந்தால்?!
      தவற விடாதீர்கள்
      நன்றி ரூபக்ராம்

      Delete
  7. தகவலை சுவாரஸ்யமாக கழுகார் பாணியில்
    பதிவு செய்ததை ரசித்தேன்

    ReplyDelete
  8. நடந்தது பதிவர்கள் குழுவின் செயற்குழு கூட்டமா? கூட்டத்தில் என்ன பேசினார்கள் எனக் கேட்டு எழுதுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. கலந்து கொண்டவரே அது பற்றி எழுதவில்லையே!
      நன்றி சார்

      Delete
  9. தகவலுக்கு நன்றி குட்டன்.

    ReplyDelete
  10. urupadiyana vishayam pesina sarithan..nadanthataai ariya katthirukkirom...

    ReplyDelete
  11. அறிய தந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  12. எந்த விதமான சுயநலமில்லா நட்புதான் வலை நண்பர்களின் நட்பு அப்படி நண்பர்கள் ஒன்று சேர்ந்தது பொதுநலனுக்காக
    நண்பர்கள் கோடிப் பேசியதும் நல்லதுதான் நல்லவர்கள் ஒன்று சேர்ந்தால் நல்லதே நடக்கும்
    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலசுப்ரமணியன்

      Delete
  13. ம்ம்ம் கூடிய சீக்கிரம் போன வருசம் போல இந்த வருசமும் பெரிய அளவுல நடத்துவாங்க. கலந்துக்கோங்க சகோ!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் கலந்து கொள்வேன் ராஜிக்கா!

      Delete
  14. என் இல்லம் வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கலந்து கொண்டவர்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும் உங்கள் விருந்தோம்பலுக்கு?

      நன்றி ஐயா

      Delete
  15. அடடா குட்டனின் குட்டு வெளிப்பட்டு விட்டதே.

    ReplyDelete
    Replies
    1. சில பொய்கள் உண்மை போல் தோன்றலாம்;எப்படியாயினும் குட்டு உங்களுடன் இருக்கட்டும்.
      நன்றி

      Delete
  16. அன்புத் தம்பி குட்டன் அவர்களுக்கு..அன்பு அண்ணன் மதுமதியின் வணக்கம்..உங்களை நேரில் சந்திக்க விழைகிறேன்..முடிந்தால் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. அண்ணா அழைத்தால் தம்பி வராமல் இருக்க முடியுமா?
      ஒரு சிக்கல்...நான் வந்தால் வேறு ஒருவர் வர மாட்டார்!
      நன்றி

      Delete
  17. எனக்கு தெரிஞ்சாலும் நான் போக முடியாது என்னா 7 மணி நேரம் ஆகும் போறதுக்கு

    ReplyDelete
    Replies
    1. திருவிழாவுக்கு வாருங்கள்!
      நன்றி

      Delete
  18. முக்கியமான நம்மை அழைக்காமல் விட்ட அந்த பதிவர்களை பதிவுலகை விட்டே ஒதுக்கி வைப்போம்...

    அடடே... டீ வடை போச்சே....

    ReplyDelete
  19. சரியாச் சொன்னீங்க! :)
    நன்றி சௌந்தர்

    ReplyDelete
  20. Sunday 09-06-2013,

    Discovery book palace
    k.k.nagar.

    @ 3:45pm 1st Doscussion meet for forthcoming '2vathu Tamil valaipathivarkal maanaadu.

    ALL Bloggers are welcome.

    Ippadikki
    vizha kuzhu

    ReplyDelete
  21. Sunday 09-06-2013,

    Discovery book palace
    k.k.nagar.

    @ 3:45pm 1st Discussion meet for forthcoming '2vathu Tamil valaipathivarkal maanaadu.

    ALL Bloggers are welcome.

    Ippadikki
    vizha kuzhu

    ReplyDelete