Wednesday, September 17, 2014

நின்னைச் சரணடைந்தேன்



என் நாளை பொலியச் செய்ய
       
     ஒரு அழகிய புன்னகை போதும்

என் வலிகளை மறக்கச் செய்ய
       
     ஒரு மென்மையான தொடுகை போதும்

என் பயங்களை ஓடச் செய்ய
      
     ஒரு உடல் சேரும் அணைப்பு போதும்
     (வளியிடை போகப்படாஅ முயக்கு)

என் கவலைகள் தீர்வதற்கு
      
     ஒரு ஆறுதல் வார்த்தை போதும்

எவர் தருவார் இவையெல்லாம்
        
     என் அன்பே உன்னை அன்றி!

டிஸ்கி:என்னடா ரொம்பநாளாக்காணாமப் போனவன் திரும்பி வந்திருக்கானே என திகைக்கிறீர்களா?

மதுரையில பதிவர் சந்திப்பு வருதாமில்ல!நாமளும் ஒரு பதிவர்தான்னு நெனவு படுத்தத்தேன்! 

தொடர்ந்து கொஞ்ச நாளைக்கு எழுதிக் ’கொண்டே ’போடலாம்னு இருக்கேன்!
    
       


3 comments:

  1. எங்கே திரு குட்டன் அவர்களைக் காணோமே என எண்ணிக்கொண்டிருந்தபோது இந்த ஆண்டு கூடல் மாநகரில் நடக்க இருக்கும் மூன்றாவது வலைப்பதிவர் சந்திப்பு தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பி கர்ஜிக்கவைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்து சொல்லி வரவேற்கிறேன்!

    ReplyDelete
  2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு “குட்டன்” அவர்களின் பதிவு! :))))

    வருக! பல்சுவைப் பதிவுகள் தருக!

    ReplyDelete
  3. மறுபடியும் நேரில் சந்திக்கிறோம்...!

    ReplyDelete