Wednesday, February 27, 2013

நாம் அனைவரும் பென்சில்களா?!



      ஒரு சிறந்த பென்சிலாக விளங்க வேண்டுமானால்,அந்தப் பென்சில்—
      
           தன்னை ஒருவர் கையில் எடுத்துக் கொள்ளச் சம்மதித்தால்தான் சிறப்பான செயல்களைச்     செய்ய முடியும்
     
     தேவைப் படும்போதெல்லாம் நன்கு சீவி கூர்படுத்தப்படத் தயாராக இருக்க வேண்டும்- அது வலித்தாலும் கூட.
    
      செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்
    
      உள்ளே என்ன இருக்கிறதோ அது மிக முக்கியம்
    
       எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் தெளிவாக எழுத வேண்டும்;தன் செயலைப் பதிக்க வேண்டும்

 இப்போது அந்தப் பென்சிலின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போமா?

கடவுளின் கையில் நம்மை ஒப்படைக்க வேண்டும்நம்மிடம் இருக்கும் திறமைகள் மற்றவருக்குப் பயன்பட வேண்டும்
.
வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம்;ஆனால் அவையே நம்மைக் கூர் படுத்திச் சிறக்கச் செய்யும் சாதனங்கள்.

நம் தவறுகளைத் திருத்தி நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்குள்ளே என்ன இருக்கிறது என்பது மிக முக்கியம்

வாழ்வில் எந்தக்கட்டத்திலும் எந்த நிலையிலும் சோர்வின்றிச் செயல் பட்டு நம் முத்திரை பதிக்க வேண்டும்

நாம் பென்சில் போலத்தான்.

படைத்தவன் நம்மைப் படைத்த நோக்கத்தைச் சரிவர நிறவேற்ற வேண்டும்.

வாழ்க்கையில் சிறக்க வேண்டும்!



38 comments:

  1. அழகான உதாரணமும்.. பதிவும்.. உண்மைதான்ன்ன்..

    “உளி ஏறுவது வலி என நினைத்தால்....
    கற்கள் சிலையாகாது..”..

    ReplyDelete
    Replies
    1. அழகாகச் சொன்னீர்கள் அதிரா.
      நன்றி

      Delete
  2. பென்சில் தத்துவம் சிறப்பு! உண்மையில் கடைபிடிக்க வேண்டிய ஒன்றும் கூட! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சுரேஷ்

      Delete
  3. நல்ல ஒப்புமை....

    அழகிய நடையில்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சௌந்தர் சார்

      Delete
  4. பென்சிலையும் மனிதர்களையும் ஒப்பிட்டு எழுதியவிதம் அருமை!

    // நாம் அனைவரும் பென்சில்களா?! ////

    ஆம்! நிச்சயமாக!

    ReplyDelete
  5. பென்சில் ஒப்புமை அருமை...

    ReplyDelete
  6. ம்ம்..உண்மை தான்..நல்லா சொன்னிங்க பாஸ்..

    ReplyDelete
  7. வாழ்வில் எந்தக்கட்டத்திலும் எந்த நிலையிலும் சோர்வின்றிச் செயல் பட்டு நம் முத்திரை பதிக்க வேண்டும்//உண்மை

    ReplyDelete
  8. நல்ல உதாரணம்.... சிறப்பான பகிர்வுக்கு நன்றி குட்டன்.

    ReplyDelete
  9. என்ன வர வர தத்துவங்களாக தந்துகொண்டு இருக்கிறீர்கள். இருப்பினும் ஒப்பீடு சரியே!

    ReplyDelete
    Replies
    1. என்னவோ தெரியவில்லை;தத்துவம் வருகிறது!
      நன்றி சார்

      Delete
  10. ஹா ஹா ஹா !!! நான் இந்த பென்சிலை கடவுள் கையில் கொடுக்காமல், ஒரு அரக்கன்/சாத்தான் கையில் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன். செம சிரிப்பு....

    நல்ல கருத்து நண்பா, உதாரணத்துடன் சொன்னது அருமை!

    ReplyDelete
  11. ''..படைத்தவன் நம்மைப் படைத்த நோக்கத்தைச் சரிவர நிறவேற்ற வேண்டும்.


    வாழ்க்கையில் சிறக்க வேண்டும்! ..''
    unmai.
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  12. பென்சிலா...?

    சீவ சீவ குட்டையாகி விடுவோமே....


    என்ன குட்டன் ஐயா.... தத்துவம் இடிக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. முடிவு என்பது மனிதனுக்கும் உண்டல்லவா!
      பென்சில் சிறித்து சிறிதாக மறைந்தாலும்,பயன்பட்டு மரைகிறது.
      மெழுகுவர்த்தி தன்னையே உருக்கிக் கொண்டு ஒளி தருகிறது
      அதுதானே சிறப்பு அருணாம்மா

      Delete
  13. சிறப்பான உதாரணம் அருமையான பதிவு

    ReplyDelete
  14. பென்சில் உவமை அருமை உண்மை

    ReplyDelete
  15. ஆஹா, ஒரு பென்சில் உள்ளே இவ்வளவு தத்துவமா !! நல்ல பதிவு நண்பரே !

    ReplyDelete
  16. பென்சிலை பயன்படுத்தும்போது இனி உங்கள் நினைவு வரும்.
    பென்சில் தத்துவங்கள் சிறப்பாக இருக்கின்றன.
    வாழ்த்துகள்

    ReplyDelete