Friday, August 23, 2013

நான் என்றும் உன்னுடையவன் என்னுயிரே!




உனக்கு நான் வாக்களிக்கிறேன் அன்பே

உடல் நலமில்லாத நேரத்தில் உன் மருத்துவனாக

மழையில் செல்கையில் உனக்குக் குடையாக

களைப்படையும்போது அமரும் இருக்கையாக

நீ தலை சாய்த்துஉறங்க ஒரு தலையணையாக

உன் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக

மற்றவர் உனக்குச் செவி சாய்க்க உன் குரலாக

உன் வலிகளில் ஒரு மருந்தாக

உன் இருளில் ஒரு ஒளிரும் தீபமாக

கேள்விகள் எழும்போது பதிலாக

தடைகளைத் தகர்க்க ஊக்கமாக

அச்சப்படும்போது ஆறுதல் கரமாக

தினம் காலை உன்னை எழுப்பும் முத்தமாக

உறங்குமுன் கிசு கிசுக்கும்”நீயே என் உயிர்” ஆக

என்றும் இருப்பேன் நான்!

அன்பே!நான் முழுமையாய் உன்னுடையவன்!


........................................................................








10 comments:

  1. இணையத்தில் உலவும்போது உனக்குப் பிடித்த பதிவாக என சேர்த்துக்கொள்ளலாமே!

    ReplyDelete
  2. குட்டனுக்கு வரவர அறிவும் அன்பும் ஜாஸ்தி ஆயிட்டே போகுது

    ReplyDelete
    Replies
    1. இருப்பதுதான் ஜாஸ்தியாகும்;அன்பு சரி;அறிவு?!:))

      நன்றி சீனு

      Delete
  3. நானும் சீனுவின் கருத்தை ஆமோதிக்கிறேன்

    ReplyDelete