Friday, September 25, 2015

புண்ணாக்கு,புண்ணியகோடி,புதுக்கோட்டை!



வழக்கமாக அல்லது அநேகமாக அனைவரும் பதிவு எழுதிவிட்டு அதன் பின் பொருத்தமான தலைப்பு வைப்பார்கள்.

சில நேரங்களில் தலைப்பு வைத்துவிட்டு அதற்குத் தக பதிவு எழுதுவதும் உண்டு.

நேசித்து தலைப்பு வைத்தபின் எழுதுக
யோசித்து அதற்குத் தக!

அப்படி எழுதுகிறேன் இன்று!

இப்படி ஒரு தலைப்பு வைக்க ஒரு  உந்துதல் உண்டு!

புண்ணாக்கு 80 எள்,தேங்காய்,கடலை ஆகியவற்றை ஆட்டி எண்ணை டுத்தபின் மிஞ்சும் சக்கை.

பிண்ணாக்கு என்பது புண்ணாக்கு ஆகி விட்டது.

மாட்டுக்குத் தீவனமாகவும் வைக்கப்படுவது இது.

சில மனிதர்களைப் புண்ணாக்கு என்று வர்ணிப்பதுண்டு!

காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் சிலேடையாக வருகிறது புண்ணாக்கு...

“ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே இரையும்
 மூடித் திறக்கின் முகங்காட்டும்-ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடு பாம்பெள்ளெனவே ஓது”

இது உங்கள் அனைவருக்கும் தெரிந்தபாடல்தான்.பொருளும் தெரிந்தவர்கள்தான் நீங்கள்.
எனவே இதைப்பற்றி வேறெதுவும் எழுதப்போவதில்லை!

புண்னியகோடி 80 யார்? அன்பேவா படத்தில் டி ஆர் ராமசந்திரன் புண்ணாக்கு வியாபாரி
யாக வருவார் .

அவர் பெயர் புண்ணாக்கு புண்ணியகோடி!


புதுக்கோட்டைதான் இன்றையா சூடான செய்தி!அங்கு நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு பற்றி எழுதாதவர் பதிவரே அல்ல என்பது போல் அனைவரும்  வரிந்து கட்டிக் கொண்டுஅது பற்றி ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.நானும் என் பங்குக்கு ஏதோ எழுதி விட்டேன் முன்பே.இன்னும் 15 நாட்கள்தான்.சிறுவர்களாக இருந்தபோது தீபாவளியை எதிர்பார்த்து, நாட்களை எண்னியவாறே காத்திருப்போம்!அது போன்ற ஒரு மன நிலையில் இருக்கிறார்கள் பதிவர்கள்.

பாக்கியவான்கள் போய் வாண வேடிக்கையோடு கொண்டாடுங்கள்!


10 comments:

  1. பாடல் பொருளையும் சொல்லி இருக்கலாம்! இந்த புண்ணாக்குக்கு தெரியவில்லை குட்டன் ஜி! :)

    புதுக்கோட்டை விழா சிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஜி

    வாழ்த்துக்கள் வித்தியாசமான கலகலப்பு...த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நாங்களும் காத்திருக்கின்றோம்...சார் நன்றி...

    ReplyDelete
  4. பதிவில் கில்லர்ஜி வாடை தெரிகிறதே ,குட்டன்ஜி :)

    ReplyDelete
    Replies
    1. //பதிவில் கில்லர்ஜி வாடை தெரிகிறதே ,குட்டன்ஜி :)// நீங்கள் கேட்டது!
      // இப்படி ஒரு தலைப்பு வைக்க ஒரு உந்துதல் உண்டு!// நான் சொன்னது!! அதே அதே!
      இவ்வளவுதானா,இன்னும் தொடருமா-நீங்கள் கேட்காதது
      3 ஜி 4 ஜி என்று இன்னும் பல ஜி உண்டே!-நான் சொல்வது!
      நன்றி பகவான்ஜி

      Delete
  5. // அங்கு நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு பற்றி எழுதாதவர் பதிவரே அல்ல என்பது போல் அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டுஅது பற்றி ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.//

    அநேகம் பேர் எழுதிவிட்டதால் தான், நான் பதிவர் சந்திப்பு பற்றி எழுதவில்லை.

    ReplyDelete
  6. அநேகம் பேர் எழுதிவிட்டனர்..எனக்குத்தான் கொடுப்பினை இல்லை...

    ReplyDelete
  7. புண்ணாக்கு புண்ணியகோடி என்பது இந்தப்பதிவில் இருந்து எடுக்கப்பட்டதா?
    http://punnaakku.blogspot.in/

    --
    Jayakumar

    ReplyDelete
  8. கில்லர்ஜி பாணியில் அசத்தி விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete