Monday, October 29, 2012

விஸ்வரூபம்--சில வியப்பான தகவல்கள்!



விஸ்வரூபம் என்பது என்ன? யார்,எப்போது,எங்கே விஸ்வரூபம் எடுத்தார்?

இந்தக் கேள்விகளுக்கான  விடை பகவத்கீதையில் இருக்கிறது.

பதினோறாவது அத்தியாயத்தில்.பார்த்தன்  பகவானின் விஸ்வரூபத்தைக் காண விருப்பம் தெரிவிக்க,பகவான் பார்த்தனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார்.”என்னுடைய நூற்றுக் கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் பற்பல விதங்களாகவும் பல நிறங்களும் பல உருவங்களும் கொண்டவையாகவும் உள்ள தெய்விகமான உருவங்களைப் பார்” என்று அர்ஜுனனிடம் சொல்கிறார்.

அர்ஜுனன் கண்டதென்ன?

அநேக முகங்களோடும்,அநேக கண்களோடும் கூடியவரும்,பல அற்புதமான காட்சிகள் கொண்ட வரும் அநேக விதமான தெய்வீகமான ஆபரணங்களோடு கூடியவரும்,திவ்யமான பற்பல ஆயுதங் களைக் கைகளில் ஏந்தியவரும்,தெய்விகமான மாலைகளையும் ஆடை களையும்  அணிந்த வரும், திவ்யமான வாசனைத் திரவியங்களைத் தம் உடலில் பூசிக் கொண்டி ருப்பவரும், எல்லா விதங்களிலும்  ஆச்சரியமயமானவரும் ,எல்லையற்றவரும், எல்லாப் புறங்களிலும் முகங்களோடு விளங்குகின்றவரும்,விராட் ஸ்வரூபமானவரும் ஆன தேவாதி தேவனான பரமேசுவரனை அர்ஜுனன் கண்டார்.

அர்ஜுனன் சொன்னான்”தேவனே !உங்கள் திருமேனியில் எல்லா தேவர்களையும்  அநேக பிராணி   வர்க்கங்களயும்,பிரம்மதேவனையும்,மஹாதேவனையும்  எல்லா ரிஷிகளையும், தெய்விகமான சர்ப்பங்களையும் பார்க்கிறேன்”

“உங்களை எண்ணிலடங்காத கைகள்,வயிறுகள் முகங்கள்,கண்கள் கொண்டவராகவும், எண்ணற்ற உருவங்கள் ஏற்றவராகவும்,எல்லாப் பக்கங்களிலும் பார்க்கிறேன்.உங்களுடைய முடிவான எல்லையைப் பார்க்கவில்லை.நடுப் பகுதியையும் பார்க்கவில்லை;மேலும் ஆரம்பத்தையும் பார்க்கவில்லை”

சந்திரன் சூரியன் ஆகியவை பகவானின் கண்களாக இருக்கின்றனவாம்

எல்லாமே அவனுக்குள் அடக்கம் என்பதையே விஸ்வரூபம் உணர்த்துகிறது!

4 comments:

  1. விஸ்வரூபத்தின் கதையை அப்படியே சொல்லி அழகாக காட்சிப்படுத்திவிட்டீரே! அருமை நண்பரே!

    ReplyDelete
  2. சிறப்பான கீதைப்பகிர்வு.

    ReplyDelete
  3. இத கருப்பொருளா வச்சித்தான் கமல் சார் விஸ்பரூபமெடுக்கிறாரா

    ReplyDelete