Tuesday, September 18, 2012

எழுதாத பதிவொன்று!



எழுதாத பதிவொன்று பிறந்தது இன்று

வழுவாத நெஞ்சொன்று வழுவிற் றின்று

நழுவாத துகிலும் கூட நழுவிற் றின்று

தழுவாத தேகச் சூடும் குளிர்ந்த தின்று.



வெட்டியது மின்னல்,வெடித்தது இடி

கொட்டியது மழை,குளிர்ந்தது பூமி

கட்டிய கரையும் உடைந்து போனதே

கட்டுப்பாடின்றி பெருகிற்று வெள்ளம்



பிறந்தது புதிதாக  உறவு ஒன்று

பறந்தது  முன் வந்த துன்பம் எல்லாம்

மறந்தது  பழைய பகை,சண்டை எல்லாம்

சிறந்ததே நடந்தது வேறென்ன சொல்ல?!




18 comments:

  1. மிக்க மகிழ்ச்சி
    சிறந்ததேதொடர்ந்து கிடைக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Replies

    1. பறந்தது முன் வந்த துன்பம் எல்லாம்

      மறந்தது பழைய பகை,சண்டை எல்லாம்
      >>
      எப்படியோ ஒத்துமையா இருந்தா சரிதான்

      Delete
  3. எழுதாத பதிவொன்று பிறந்தது.....
    அருமையான கவிதை...நடத்துங்கள்

    ReplyDelete
  4. உங்க கவிதையை எடிட் பண்ணமாட்டேன். பயப்படாதீங்க.நல்ல இருக்கு.

    ReplyDelete
  5. என்ன தாங்க நடந்தது...?
    கடைசி வரையில் சொல்லவேயில்லை...

    ReplyDelete
    Replies
    1. சொல்லாத சொல்லுக்குப் பொருள் அதிகம்
      நன்றி அருணா செல்வம்

      Delete


  6. அழகிய சந்தம் ! அருமை! எளிமை!இனிமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி புலவர் ஐயா அவர்களே

      Delete
  7. புதிய உறவொன்று குழந்தையாய்ப் பிறந்ததுபோல இருக்கு கவிதை !

    ReplyDelete
  8. நன்றி ராஜசேகர் சார்

    ReplyDelete