Tuesday, September 11, 2012

கிழிந்த டவுசரும் நனைந்த டயப்பரும்!



முதலில் டவுசர் பற்றிச் சில விசயங்கள்.

என் அப்பா சொல்வார்,அவர் பள்ளிப்படிப்பு முடியும் வரை அரை டிரௌசர்தான் அணிவாரம். கல்லூரியில் சேர்ந்த பின் ட்ரவுசர் அணிய முடியாது என்பதாலும்,பேண்ட் தைக்க வசதி இல்லாததாலும் வேட்டி அணிந்து தான் கல்லூரி செல்வாராம்;அதுவும் நாலு முழம் வேட்டி.மாலை வீடு திரும்பியதும்,வேட்டியை அவிழ்த்து மடித்து வைத்து விட்டுப் பழைய ட்ரவுசர்களை அணிந்து கொள்வாராம்.

ஒரு நாள் மாலை அவ்வாறு ட்ரவுசர் அணிந்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த கல்லூரித்தோழன் ஒருவன் அவரைப் பார்த்து “என்னய்யா,ட்ரவுசர் போட்டிருக்கீரு/” என்று ஆச்சரியத்துடனும் ஏளனமாகவும் கேட்டானாம்.அக்காலத்தில் கல்லூரி  மாணவன் என்றால் அவன் அரை ட்ரவுசர் அணிவது கேவலாமாக,சிறு பிள்ளைத் தனமாகக் கருதப் பட்டது.

ஆனால் இப்போது வயதானவர்கள் கூட அரை ட்ரவுசர் அணிந்து ஊரெல்லாம் சுற்றுகிறார்கள்!

என் அப்பா கிழிந்த ட்ரவுசர் பற்றிக் கூட சொல்லுவார்.சிறுவர்கள் விளையாடும்போது அதிகம் கண்ட இத்தில் உட்கார்ந்து,சறுக்கி எல்லாம் செய்வதால்,உட்காரும் இத்தில் ட்ரவுசர் கிழிந்து போகுமாம்.அதற்காக அதைத் தூக்கி எறிந்து விட முடியுமா?பின் பக்கம் அந்தக் கிழிசலின் மேல் ஒரு சதுரத் துணித்துண்டை ஒட்டுப்போட்டுத் தைத்து விடுவார்களாம்.ஆனால் ட்ரவுசர் கலர் நீலம் என்றால் ஒட்டு சிவப்பாக இருக்குமாம்!

ஆகவே வுசர் கிழிந்தால் கவலை வேண்டாம்.ஒட்டுப் போட்டு அணிந்து கொள்ளலாம்!!

”நீங்க இந்த மாதிரி செஞ்சதே இல்லையா?!”

அடுத்து டயப்பர்.

குழந்தைகளுக்காக உருவான சாதனம்.

இப்போது வயதானவர்களும் அணிந்து கொள்கிறார்கள்.1877 இல் மரியா ஆலன் என்பரால் 
முதலில் யு எஸ்ஸில் துணி டயப்பர்  பெரிய அளவில் தயாரிக்கப் பட்டது.

 ஈரமாகி விட்ட டயப்பரை நீண்ட நேரம் மாற்றாமலே இருந்தால் அப்பகுதி சிவந்து அரிப்பு எடுத்து விடும்.

அதிக விவரத்துக்கு விக்கிபீடியா பார்க்கவும்.



17 comments:

  1. டவுசர் பாண்டி.... :))

    டயப்பர் - பலவிதங்களில் குழந்தைகளுக்கு தொந்தரவு...

    ReplyDelete
  2. நானெல்லாம் அதைக்கண்டும்
    அதைக்கடந்தும்தான் வந்தவன் என்பதால்
    ப்ரிந்து கொள்ளவும் ரசிக்கவும் முடிந்தது
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நானெல்லாம் அதைக்கண்டும்
    அதைக்கடந்தும்தான் வந்தவன் என்பதால்
    ப்ரிந்து கொள்ளவும் ரசிக்கவும் முடிந்தது
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்லாவே சொல்லியிருக்கிறீங்கள்.ஒட்டுப் போடுறது பெரிய விஷயமா என்ன.....கிழிச்சு விடுறதும் ஸ்டைல்தானே !

    ReplyDelete
  5. இதை யாரோ மண்டபத்துல எழுதிக்குடுத்த மாதிரி இருக்குதே. நக்கலடிக்கரீங்களா?

    ReplyDelete
    Replies
    1. நான் என்ன தருமியா?ஏதோ டயப்பர்,டவுசர்ன்னெல்லாம் வலையில பார்த்தேன்;நானுன் எழுதினேன்!நக்கலெல்லாம் தெரியாது ஐயா!
      நன்றி

      Delete
  6. அன்பின் குட்டன்,

    டவுசர் பற்றியும், டயப்பர் பற்றியும் அருமையாக அலசியிருக்கிறீர்கள்.

    மேலும் முன்னதன் சதுரவடிவ ஒட்டு, பின்னதன் வெட்(wet) பற்றியும் அதன் நன்மை தீமைகளும் விளக்கமாக அறிந்து கொண்டேன்.

    என்னையும் யூத் கிளப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி. :-))))

    ReplyDelete
  7. அன்பின் பட்டணம் வந்த பட்டிக்காட்டாரே!
    சமிபத்தில் தமிழகத்தையே குலுக்கிய விழாவின் வெற்றிக்கு முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவரல்லவா!
    யூத் கிளப்பில் நீங்கள் ஆயுட்கால உறுப்பினர்!
    நன்றி

    ReplyDelete
  8. இதே மாதிரி தலைப்புல பிலாசபி ஏதோ பதிவு போட்டாரே!! ஆனா மேட்டர் வேற!! [இதப் படிச்சதும் நம்ம பழைய நிலைமை ஞாபகத்துக்கு வந்துடுச்சு............ ஹி.......ஹி.......ஹி.......ஹி.......

    ReplyDelete
  9. அஞ்சாசிங்கமும் பதிவு போட்டாரே!
    நன்றி

    ReplyDelete