Wednesday, June 6, 2012

இதிகாசத்தை இகழ்ந்த பதிவரும்,பாராட்டியவரும்!


சென்ற வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர் திரு அப்பாதுரை என்னும் அமெரிக்கா வாழ் தமிழர்.அறிவுஜீவி.

இவர் அறிமுகப்படுத்திப் பாராட்டிய ஒரு பதிவர் நாக்பூரில் வாழும் பொதுவுடமைவாதியான காஸ்யபன் என்பவர்.இன்னொரு அறிவுஜீவி!குறிப்பாக அவர் எழுதிய இபிகோ 375 என்ற சிறுகதையை மிகவும் பாராட்டிப்  புகழ்ந்திருந்தார் திரு அப்பாதுரை.

அப்படி என்ன கதை அது?

அச்சிறிய கதையின் சுருக்கம் இதோ---

“துர்வாச மகரிஷி,குந்திபோஜனிடம் அவன் மகள் குந்தியை ஆசிரம சேவைக்காகக் கேட்டு அழைத்து வந்து கற்பழித்து விடுகிறார்”

இதுதான் திரு அப்பாதுரையை மிகவும் பாதித்த கதை!

துர்வாசி மகரிஷி மிக தபோபலம் பெற்ற ஒரு மகரிஷி. எல்லோராலும் மதிக்கப்பட்டவர்.அவரது பலவீனம் அவரது கோபம் மட்டுமே!

அப்படிப்பட்ட ஒரு ரிஷியைத் திட்டமிட்டுக் கற்பழிக்கும் ஒரு காமுகனாகச் சித்திரிக்கும் கதைதான்” ஆயுள் முழுதும் நினைவில் நின்று பாதிக்கும்” கதையாம்!

உண்மைதான்.இந்துமத்தின் புராண இதிகாச கால புருஷர்களை இப்படிக் கேவலமாகச் சித்தரித்தால் இது பாதிக்கத்தான் செய்யும்.

இதிகாசம் போற்றும் புருஷர்கள் இவர்களுக்குக் கேவலமான கதைப்பொருள் ஆகிறார்கள்.

இவர்களது இந்தக் கேவலமான செயலுக்குச் சிலர் பாராட்டு வழங்குவர்.காஸ்யபன் போன்றோர் மேலும் உற்சாகத்தோடு அவதூறுக் கதைகள் எழுதுவர்!

ஏனென்றால் எதையும் சகித்துக் கொள்ளும் மதமாயிற்றே இந்து மதம்!






1 comment:

  1. உண்மைதான். ஆதங்கம் புரிகிறது

    ReplyDelete