Thursday, November 29, 2012

விளக்குப் பிடித்தவன்!



குருசாமியை முகேஷ் சார் அழைப்பதாக ஒரு பையன் வந்து சொன்னான்.

குருசாமி உடனே அவரைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றான்.அவர் மனைவியுடன் அமர்ந்திருந்தார்.

“வாப்பா,குரு!உனக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணியிருக்கேன்.என் முதலாளிக்கு ஊருக்கு வெளியே ஒரு பண்ணை வீடு இருக்கிறது.அங்கு இருந்த காவலாளி வேலையை விட்டுப் போய் விட்டான்.உடனடியாக அங்கு ஒரு காவலாளி தேவைப்படுகிறது.எனக்கு உன் ஞாபகம் வந்தது.நீ சரின்னு சொல்லி விட்டால் இன்றைக்கே சேர்ந்து விடலாம்” முகேஷ் சொன்னார்.

“பண்ணை வீடுங்கறீங்க.தோட்டம் எல்லாம் பாத்துக்கணுமோ?எனக்குத் தோட்ட வேலை யெல்லாம் தெரியாதே” என்றான் குருசாமி

முகேஷ் சொன்னார்”தோட்ட வேலையெல்லாம் வாரம் இரண்டுநாள் ஆள் வந்து செய்து விடுவார்கள்.உன் வேலை தினம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.நீ தங்குவதற்கு உனக்கு ஒரு சிறு வீடும் இருக்கிறது.நீ சமைத்துச் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக இருக்கலாம். வார இறுதி நாட்களில் முதலாளி அங்கு வந்து தங்குவார்.அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.மாதம் 3000 ரூபாய் சம்பளம்.என்ன சொல்கிறாய்?”

அவன் சம்மதித்தான்.அன்று மாலையே அவனைக் காரில்  அங்கு அழைத்துச் சென்றார்.அவன் தனது சிறிய மூட்டையுடன் போய்ச்சேர்ந்தான்.அங்கு சென்றதும் அவர் இடத்தையெல்லாம் காட்டிவிட்டு,”குரு,சனிக்கிழமை மாலை முதலாளி வந்து விடுவார்.ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பி விடுவார்.சனிக்கிழமை டவுனிலிருந்து ஒருவன் வந்து ரொட்டி,முட்டை,சிப்ஸ் எல்லாம் கொடுத்து விட்டுப்போவான் வாங்கி வைத்துக் கொள்.சாப்பாட்டுக்கு முதலாளியே ஏற்பாடு செய்து கொள்வார்.அவர் கூப்பிடும் குரலுக்கு உடனே போய் அவருக்குப் பணிவிடை செய். அவ்வளவுதான்.”

போய் விட்டார்.

அன்று புதன் கிழமை.இன்னும் மூன்று நாள் தனிக்காட்டு ராஜாதான்.

மூன்று நாளும் சமைத்துச் சாப்பிட்டு விட்டு-முகேஷ் கொடுத்த அட்வான்ஸில் சாமான் வாங்கி-ஜாலியாக இருந்தான்.

சனியன்று மாலை ஒரு கார் வந்து நின்றது.ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கினார். அவனைப் பார்த்து ”நீதான் குருசாமியா?”எனக் கேட்டுவிட்டு,காரின் உள்ளே பார்த்து இறங்கு என்று சொல்ல ஒரு பெண் இறங்கினாள்.தலையில் தலைப்பைப் போர்த்தியிருந்ததால் முகம் தெரியவில்லை.இருவரும் உள்ளே சென்று விட்டனர்.

உள்ளிருந்து பேச்சு,சிரிப்புச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் ஒருவன் வந்து ஒரு  அட்டை டப்பாவில் எதையோ வீட்டினுள் கொடுத்து விட்டுப் போனான்.

திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது.

வீடு இருட்டானது.

உள்ளிருந்து முதலாளியின் குரல்”என்ன இது ?இன்வெர்டர் ரிப்பேரா? குருசாமி,ஒரு மெழுகு வர்த்தி பத்த வச்சுக் கொண்டு வா”

அவன் வர்த்தியைக் கொளுத்தி உள்ளே எடுத்துச் சென்றான்.

முதலாளி ஒரு லுங்கி மட்டும் அணிந்து இருந்தார்.

டீப்பாயில் ஒரு பாட்டிலில் திரவமும்,இரண்டு கிளாஸ்களும் தட்டில் சிப்ஸும் இருந்தன.

”அதை அந்த டீப்பாய் மேலே வைத்து விட்டுப்போ”

குனிந்து வைக்கப் போகும் போது அது வரை இருட்டில் இருந்த அந்தப் பெண் மீது வெளிச்சம் விழுந்தது.

அவள் இருட்டுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டாள்.

ஆனால் அந்த ஒரு நொடியில் அவன் பார்த்து விட்டான்.

அதிர்ந்தான்”என்ன இது?இப்படியும் நடக்குமா?”

வெறுப்பு,கோபம், ஏற்பட்டது.

வெளியே வந்தான்.

காறித்துப்பினான்.

அந்த இருட்டில் வெளியே நடந்தான்.

பிரதான சாலைக்குப் போனால் பஸ் லாரி ஏதாவது கிடைக்காதா?

முகேஷ் என்ற மனிதனைப் பற்றி நினைக்கவே அருவருப்பாக இருந்தது.

அவனைப் பார்க்கவே கூடாது;ஊரை விட்டே போய் விட வேண்டியதுதான் .

நடந்தான்.


Wednesday, November 28, 2012

வஞ்சிக்கப்பட்ட வஞ்சி!!



”அழகாய் இருந்தாள்;அருகில் சென்றேன்
     
         யார் எனக்கேட்டேன்;வஞ்சி என்றாள்

பழகினோம்  நெருங்கி ;காலம் நகர்ந்தது
       
       விட்டு விலகினேன் .மறந்து சென்றேன்

தவறென்ன என்மேல்?சொன்னதைச் செய்தேன்!
    
        வஞ்சி என்றாள் அவள்;வஞ்சித்தேன் நான்! ”   (குட்டன்)


இதோ இது பிறக்கக் காரணமான யாப்பருங்கலக்காரிகைப் பாடல்--

“வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் நானுமவன்
 வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
 வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
 வஞ்சியாய் வஞ்சியர் கோ!”

தலைவி தோழியிடம் சொல்கிறாள்”தோழிப்பெண்ணே!அவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்று  தன் ஊரைச் சொன் னான்.

நானும் அவன் வஞ்சிக்க மாட்டேன் எனச் சொல்கிறான் 

என்றெண்ணிச் ம்மித்ேன்.

 அ
ந்த வஞ்சி நாட்டுத் தலைவன்,வஞ்சியேன்,வஞ்சியேன் 

என்று சொல்லியும் என்னை வஞ்சித்து விட்டான்.(போனவன் 

இன்னும் திரும்பி வில்லை!”)




இப்பாடலில் அவன் வஞ்சியேன் எனச் சொன்னான்;ஆனால் வஞ்சித்தான் !

என் பாடலில் அவளே வஞ்சி என்று சொல்லி விட்டாள்! எனவே வஞ்சித்தேன்!

தமிழ் வாழ்க!

Tuesday, November 27, 2012

உறை அணிவது மிக அவசியமானது,பாதுகாப்பானது!i



உறை மிக அவசியமானது.

ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி.

உறை அணிவது பாதுகாப்பானது.

பிரச்சினைகளைத் தவிர்க்க வல்லது.

ஆண்கள்  ஷூ அணியும்போது அவசியம் காலுறை அணிகின்றனர்.

ஆனால் ஷூ அணியும்போது மட்டுமல்லாமல்,வேறு நேரங்களிலும் அது அவசியமாகிறது .

குளிர் பிரதேசங்களில் வசிக்கும்போது காலுறை மிக அவசியம்.

குளிர் அலை அடிக்கும் நேரங்களில் அது அணியாமல் வெளியில் செல்வது சரியல்ல.

அது மட்டுமல்ல.

பலருக்குக் குதிகாலில் வெடிப்புகள் வரும்-பித்தவெடிப்பு என்று சொல்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள் காலுறை அணிவது  மிக அவசியம்.

செருப்பு அணியும்போது கூடக் காலுறை அணிய வேண்டும்.இதற்கெனவே கட்டை விரலுக்குத் தனியாக இடம் ஒதுக்கப்பட்ட காலுறைகள்  இருக்கின்றன.

பெண்கள் இத்தகைய காலுறைகளையே அணிகிறார்கள்.

அது தவிர கையுறை.இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கையுறை அணிகி றார்கள்.

வட மாநிலங்களில் குளிர்காலங்களில் கையுறை அணியாமல் வண்டி ஓட்ட முடியாது.

தோல் கையுறையோ,கம்பளிக் கையுறையோ அணியலாம்.

சென்னையில் கூடப் பல பெண்கள் முழங்கை வரை மூடிய கையுறை அணிந்து வண்டி ஓட்டுவதைப் பார்க்கிறோம்.

அநேகமாக அது வெள்ளை நிறமாக இருக்கும்.

வெயிலில் செல்வதால் கைகள் கருப்பாகி விடாமல் இருக்க அணிகிறார்கள் எஎ எண்ணுகிறேன்.

குளிரில் ஒரு குரங்குக் குல்லா அணிகிறார்கள்.

அது கூட ஒரு தலையுறைதான்;குளிரிலிருந்து பாதுகாக்கிறது.

அதுதவிர,வீட்டில் தலையணை,சோஃபா இவை அழுக்காகாமல் இருக்க அவற்றுக்கும் உறை அணிவித்துப் பாதுகாக்கிறோம்.

உறை பாதுகாக்கிறது .

மிக அவசியமானது.

வேறு ஏதாவது உறை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

Monday, November 26, 2012

என்ன கொடுமை இது சரவணா!



வாலிபால் மைதானம்.

விளையாட்டில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து விட்டு கைத்துண்டால் வியர்வையைத் துடைத்தபடி வரும் ரமேஷின் பார்வையில் மைதானத்தின் ஒரு இருண்ட மூலையில் அமர்ந் திருக்கும் உருவம் தெரிகிறது.

அருகில் செல்கிறான்.

யாரப்பா நீ?இங்க இருட்டில உக்காந்து என்ன பண்ணிட் டிருக்கே?” ரமேஷின் கேள்வி.

அந்த உருவம் ,ஒரு ஆண்தான்.கையில் ஒரு சீசாவில் ஏதோ மது வகை.

“ஏண்டா இங்க உக்காந்து தண்ணியா அடிச்சிட்டிருக்கே? எந்திரிடா?”

"நீ யாருt என்ன விரட்ட?”  அவன் கேட்க,ரமேஷ் அவன் காலரைப் பிடுத்துக் கொத்தாகத் தூக்கி ஒரு அறை விடுகிறான்.

”என்னையா கேக்குறே நாயே?போலீஸ்காரண்டா”

“அய்யா என்னை மன்னிச்சிடுங்க.தெரியாமப் பேசிட்டேன்.”

“எங்க திருடிட்டு வந்து இங்க உக்காந்திருக்கே?”

“அய்யா இப்ப எங்கயும் திருடலீங்க;”

“அப்போ நீ திருடன்தான்! நட ஸ்டேசனுக்கு”

”அய்யா இப்ப ஒண்ணும் செய்யலீங்க.அப்ப்ப ஏதாவது செய்வேன்”

“என்ன செய்வே?ரோட்டில போற பொம்பளைங்க கிட்ட நகை திருடுவயா?”

“அய்யா சார்! உங்களுக்குத்தெரியுமா?திருடிட்டு விக்கறதுதான்  சார் பேஜாரு!”

” இதோ பார்.இந்தப் பகுதில இருக்கற அடகுக்கடைக் காரனை யெல்லாம் எனக்குத் தெரியும்.நீ திருடிட்டு எங்கிட்டக் கொண்டு  வா.நல்ல விலைக்கு நான் வித்துத் தரேன்.ரெண்டு பேரும் பிரிச்சுக்கலாம்.உனக்கும் பிரச்சினை இல்லாமப் பார்த்துக்கறேன்.’

இப்படித்தான் தொடங்கியது அந்த வியாபார ஒப்பந்தம்.

சில காலம் நன்றாகவே நடந்தது.

மூன்று மாதங்களுக்கு முன் அவன்.முருகப்பன்,ஒரு திருட்டில் கைது செய்யப்பட்டான்.

ஜாமீனில் வெளி வந்து வழிப்பறியை மீண்டும் ஆரம்பித்தான்.

இரண்டு மூன்று காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் சொன்ன ஆளின் உருவ வர்ணனை யைக் கேட்ட காவல் அதிகாரிகளுக்கு இது முருகப்பன் வேலையே என்று தோன்றியது.

அவன் தன் நாயகியின் வீட்டில் இருக்கும்போது கைது செய்யப்பட்டான்

விசாரணயில் அவன் தனக்கு ரமேஷுக்கும் உள்ள தொடர்பு பற்றிச் சொல்ல,காவலர் ரமேஷும் கைது செய்யப்பட்டார்.

என்னத்தைச் சொல்ல போங்க!