Wednesday, December 10, 2014

மருத்துவம் செய்யும் கணினி!



ராமுவுக்கு ஒருநாள் பயங்கரத் தலைவலி. நண்பன் சோமுவிடம் சொன்னான்எனக்குத் தலைவலி மண்டையைப் பிளக்கிறது.மருத்துவரைப் பார்க்கப்போகிறேன்.”

உடனே சோமு சொன்னான்அநாவசியமாக மருத்துவருக்குச் செலவழிக்காதே..மருந்துக் கடையில் ஒரு கணினி இருக்கிறது.அதனிடம் உன் சிறுநீரின் மாதிரி கொடுத்தால் அது கண்டுபிடித்துச் சொல்லி விடும் பிரச்சினை என்ன  என்றும் அதன்காரணத்தையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும்.20 ரூபாய்தான் செலவு.’

ராமு சிறுநீரை ஒரு குப்பியில் எடுத்துக் கொண்டு கனினியிடம் போய் சிறுநீரை ஊற்றிவிட்டுப் பணத்தையும் செலுத்தினான்.கணினி கடாமுடா எனச் சப்தங்கள் எழுப்பியது.சில பல விளக்குகள் ஒளிர்ந்தன.கடைசியில் ஒரு சீட்டு வெளியே வந்து விழுந்தது.அதில் எழுதியிருந்தது” உனக்கு ஒற்றைத் தலைவலி.அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.அதிக மன அழுத்தம்,சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.வெயிலில் போகக்கூடாது.ஒரு வாரம் கழித்து மீண்டும் வா”

அவன் ஆச்சரியப்பட்டான்.ஆனால் ஒரு வாரம் கழித்து வரும்போது அதைச் சோதித்துப் பார்த்த் விடுவது என முடிவு செய்தான்.

ஒரு வாரம் கழித்துக் கொஞ்சம் குழாய்த்தண்ணீர்,தன் நாயின் மலம்,தன் மனைவி மகள் இவர்களின் சிறுநீர் எல்லாம் கலந்து கொண்டுபோய் கணினியில் கொட்டி பணத்தை கட்டினான்.முன்பு போலவே,கட முட சப்தம் விளக்குகளுக்குப் பின் கனினி ஒரு சீட்டைத் துப்பியது.

அதில் எழுதியிருந்தது---

“உன் குழாய் நீரில் சாக்கடை கலந்திருக்கிறது.

உன் நாய் வயிற்றில் பூச்சி இருக்கிறது.

16 வயதான உன் மகள் கர்ப்பமாக இருக்கிறாள்

ஆறு மாதமாக உன் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறாள்.

இவ்வளவு பிரச்சினை இருந்தால் எப்படித் தலைவலி வராமல் இருக்கும்?”

Thursday, October 23, 2014

கத்தி...ஒரு பார்வை




பல தினங்களாகவே கத்தி பற்றி ஊடகங்களில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது. கத்திக்காயம் பட்டால் டாக்டரிடம்தானே(!) போக வேண்டும்?!கத்தியால் காயம் படுவது என்பது வேறு;கத்திக் கத்தியே காயம் படுவது என்பது வேறு.இந்த பரபரப்பான சூழலில் கத்தி பற்றிய என் பார்வை…….

Wednesday, September 17, 2014

நின்னைச் சரணடைந்தேன்



என் நாளை பொலியச் செய்ய
       
     ஒரு அழகிய புன்னகை போதும்

என் வலிகளை மறக்கச் செய்ய
       
     ஒரு மென்மையான தொடுகை போதும்

என் பயங்களை ஓடச் செய்ய
      
     ஒரு உடல் சேரும் அணைப்பு போதும்
     (வளியிடை போகப்படாஅ முயக்கு)

என் கவலைகள் தீர்வதற்கு
      
     ஒரு ஆறுதல் வார்த்தை போதும்

எவர் தருவார் இவையெல்லாம்
        
     என் அன்பே உன்னை அன்றி!

டிஸ்கி:என்னடா ரொம்பநாளாக்காணாமப் போனவன் திரும்பி வந்திருக்கானே என திகைக்கிறீர்களா?

மதுரையில பதிவர் சந்திப்பு வருதாமில்ல!நாமளும் ஒரு பதிவர்தான்னு நெனவு படுத்தத்தேன்! 

தொடர்ந்து கொஞ்ச நாளைக்கு எழுதிக் ’கொண்டே ’போடலாம்னு இருக்கேன்!
    
       


Wednesday, July 30, 2014

தங்க மைசூர்பாகு!

ராமசாமி வீட்டின் சுவர், ஒரு பக்கமாக இடிந்து விட்டது. அவர் கொத்தனாரை வரவழைத்து சரி செய்ய வேண்டினார்.

 வந்த கொத்தனார் வாசலில் ஒரு பொட்டலத்தைப் பார்த்தார். 

என்னவாக இருக்குமென பிரித்துப் பார்த்த போது, அது நிறைய தங்கக்கட்டிகள் இருந்தன. அவருக்கு ஆச்சரியம்...அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வந்தது கண்டு மகிழ்ந்தார்.

ராமசாமியின் வீட்டுக்குள் அதை வைத்து விட்டு, வேலையைச் செய்ய ஆரம்பித்தார். ராமசாமியின் மனைவி கொத்தனாரிடம், "" பொட்டலத்தில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டாள்.

""அது வேறு ஒண்ணுமில்லே அம்மா! குழந்தைங்க மைசூர்பாகு வேணுமுனு கேட்டாங்க! அதான் வாங்கி வச்சிருக்கேன்.வேலையை முடிச்சுட்டு வீட்டிலே போய் கொடுக்கணும்,'' என்றார்.

ராமசாமியின் மனைவிக்கு மைசூர்பாகு என்றால் ஏக இஷ்டம். கொத்தனார் சாப்பிடப்போன நேரத்தில், ஒன்றை எடுத்து சாப்பிட்டு விட்டால்,அவருக்கென்ன தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் பொட்டலத்தை பிரித்தாள். உள்ளே தங்கக் கட்டிகளைப் பார்த்ததும்அதிர்ந்தாள். அதேநேரம், மூளை வேகமாக வேலை செய்தது. 

அவசர அவசரமாக கடைக்குப் போய் ஒரு பொட்டலம் மைசூர்பாகு வாங்கி வந்தாள்.  பொட்டலத்தில் அதை வைத்து விட்டு , தங்கக்கட்டிகளை எடுத்துக் கொண்டாள்

திரும்பி வந்த கொத்தனார் வேலையை முடித்து விட்டு, பொட்டலத்தை கையில் எடுத்தார். எடை குறைவாக இருந்தது. 

பிரித்துப் பார்த்தால் உள்ளே மைசூர் பாகு...!

அப்போது அசரீரி ஒலித்தது.(வேறு யார்?ராமசாமியின் மனைவிதான்)

""கொத்தனாரே! அந்த கட்டிகள்ராமசாமியை உன் மூலமாக அடைய வேண்டும் என்ற விதியிருந்தது. அதன்படி அது நடந்தது.அதேநேரம், ராமசாமி மூலமாக உனக்கு மைசூர்பாகு வர வேண்டும் என்பது விதி. அதுவும் சரியாக நடந்தது. யாருக்கு என்னவர வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுத்து விடுவேன்,'' என்றது.

பாவம் கொத்தனார்!


Friday, April 11, 2014

பழம் வேண்டும்;மரம் வேண்டாம்!-2

இந்த உருவகக்கதை, எத்தனையோ குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி.
பெற்றவர்கள் மிகவும் கடுமையாக உழைத்து, பட்டினியிருந்து, போராடி பிள்ளைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருப்பார்கள். வளர்ந்து, கை நிறைய சம்பாதித்துக்கொண்டு, திருமணமானபின், பெற்றவர்கள் பிள்ளைகளின் கண்களுக்கு மிகவும் வேண்டாத அருவருப்பான, உருவங்கள். அவர்கள் அளிக்கின்ற தொல்லையில் மனம் அடிபட்ட நிலையில், பெற்றோர்கள் எங்கோ ஒரு மூலையில்!

Thursday, April 10, 2014

பழம் வேண்டும்;மரம் வேண்டாம்!

மிகவும் இருண்ட ஒரு பகுதி. 

அங்கே சில மனிதப் பிறவிகள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். கிடைப்பதை உண்டு, இருந்த இடத்திலே காலம் கழிப்பவர்கள். வேறு எங்கு செல்லவும் பயம். அப்படியே சென்றாலும் கும்பலாகக் கை கோர்த்தபடி செல்வார்கள். கூச்சல் போட்டு பேசிக் கொள்வார்கள். அவர்கள் கண்களிருந்தும் குருடர்கள்.

Monday, March 31, 2014

இனம்..




இனம் என்ற சொல்லுக்குத் தமிழ் ஆங்கில அகராதியிலே காணப்படும் இணையான ஆங்கிலச் சொல்….race,ethnicity,breed.
இங்கு பிறப்பின் அடிப்படையில் இனம் தீர்மானிக்கப்படுகிறது
ஆனால் திருவள்ளுவர் இந்த இனம் என்ற சொல்லை எப்பொருளில் பயன்படுத்துகிறார்?
சிற்றினஞ்சேராமை என்று ஓர் அதிகாரம்
அதில் முதல் குறள்….

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.” (451)

இதற்கான தெளிவுரைகள் கீழே…

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்…..(சாலமன் பாப்பையா)
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்…..(கலைஞர்)
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.... (மு.வ.)

ஆக இங்கு இனம் என் று சொல்லப்படுவது பிறப்பின் அடிப்படையில் அல்ல. குணத்தின்,செயலின், அடிப்படையில் என்பது தெளிவாகிறது.

தீய குணம் உடையோர்,தீய செயல் புரிவோர், கீழ்மக்களாவர்.அதுவே சிற்றினம்

இதே அதிகாரத்தில் இன்னொரு குறள்...

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. (452)

இதற்கான பொருள்....
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.....(சாலமன் பாப்பையா)
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.....(கலைஞர்)
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.... (மு.வ.)

இந்த இனம் என்னும் சொல்லைக் கூடா நட்பு என்னும் அதிகாரத்திலும் காண்கிறோம்.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்...(822)

இதற்கான தெளிவுரை..

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்....(சாலமன் பாப்பையா)

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.....(கலைஞர்)

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்...... (மு.வ.)

இங்கு இனம் என்பது அன்புள்ளவர்,உற்றவர்,வேண்டியவர் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவையே இனம் பற்றி வள்ளுவர் சொல்வது