Showing posts with label பதவி. Show all posts
Showing posts with label பதவி. Show all posts

Saturday, May 25, 2013

சீனிவாசன்,பதவி,சட்டம்!




சீனிவாசனை எண்ணி நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.

நாம் அனைவரும் வியந்து போற்றக்குடிய சாதனை அவருடையது.

23-02-1967 இல் சண்டிகர் இந்தியாவில் பிறந்தவர் இவர்.

பிறந்த இடம் சண்டிகர் ஆனாலும் இவர் ஒரு தமிழர்.

இவரது தந்தையின் பூர்விகக் கிராமம்,திருநெல்வேலி அருகில் உள்ள  திரு வேங்கடநாதபுரம் என்பதாகும்.

1960 இலேயே இவரது குடும்பம் அமெரிக்காவின் கன்சாஸில் உள்ள லாரென்ஸ் என்ற இடத்துக்குக் குடியேறி விட்டது.

இவரது தந்தையார் கன்சாஸ் பலகலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும்,தாயார் கன்சாஸ் நகரக் கலை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும்,பின் சட்டப்பள்ளியில் சட்டமும், வாணிபப் பள்ளியில்,மேலாண்மைப் பட்டமும் பெற்றர்

இவர் முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் ஆகும்.

இவரை எண்ணி ஏன் பெருமைப்பட வேண்டும்?

அமெரிக்க ஆட்சி மன்றம் இவரை ஏக மனதாக  தலைநகரில் உள்ள மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்திருக்கிறது.

”ஸ்ரீநி அமெரிக்காவின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் ஒளி விளக்கு”என வெள்ளை மாளிகை அறிக்கையில் ஒபாமா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்

இது முதல் படிதான்...

எதற்கு?

அவர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற  நீதிபதியாக நியமனம் பெறுவதற்கு!

இந்த சீனிவாசனைப் பாராட்டுவோம்!

பல புதிய உயரங்களைத் தொட  வாழ்த்துவோம்!