Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, May 21, 2013

பன்றியாக வாழ்வதும் சுகம்தான்!













Monday, May 20, 2013

ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருந்தால் என்ன செய்வார்கள்?!

கொஞ்சம் விவகாரமான கேள்விதான்.

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால்,காமம் மேலிட்டு உடல் உறவில்தான் ஈடுபடு வார்களா?

ஆண்-பெண் உறவு என்பது வெறும் உடல் சார்ந்ததுதானா?

ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஒருவர் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

உயர்நீதி மன்றம் இக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது..

இந்த நேரத்தில் என் வழக்கறிஞர் நண்பர் ஒருவர் ஒரு முறை தெரிவித்த தகவல் நினைவுக்கு வருகிறது.

ஒரு விவாக ரத்து வழக்கில், கணவன் மனைவியின் நடத்தை சரியில்லை என்ற வாதத்தில், கணவன் தன் மனைவி ஒரு சாத்திய அறையிலிருந்து ஒரு ஆடவனுடன் வெளியே வந்ததைப் பார்த்ததாகச் சொல்ல,நீதிபதி கேட்டாராம்”அறைக்குள் அவர்கள் தவறான நடவடிக் கையில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று எப்படிச் சொல்வீர்கள்” என்று.

ஆம்.

சட்டம் எப்போதும் பெண்களின் பால் சிறிது இரக்கத்துடன்தான் நடந்து கொள்கிறது--அவர்கள் வலுவற்றவர்கள் என்பதால்.

காவல் துறைக்கு வரும் புகார்களைப் பாருங்கள்

கணவனால்,அவன் பெற்றோரால் துன்பப்படும் பெண்களின்  கதைகள்தான் தெரியும்.

மருககளால் கொடுமைப் படுத்தப் படும் மாமியார்,மாமனார்கள் இல்லையா?

மனைவியால் துன்புறும் கணவர்களே இல்லையா?

குடும்பத்தில் வன்முறையென்பது உடல் சார்ந்தது மட்டுமா?

உளம் சார்ந்த வன்முறை கிடையாதா?

மனைவியின் நடத்தையால் ,குத்தலான பேச்சால்,அலட்சியப் போக்கால் ,கவனிப் பின்மையால்  உள்ளத்தளவில் வன்முறைக்காளாகி நொந்து போகும் கணவர்கள் இல்லையா?

இன்றைய செய்தி ஒன்று.

திருவள்ளூர் அருகே ஒரு இடம்.

பேத்தி குளிக்கும்போது தண்ணீரை வாரி இறைத்து  ஈரமாக்கியதற்காக  பாட்டி கடிந்து கொள்கிறாள்.

தன் மகளைச் சொன்னது மருமகளுக்குப் பிடிக்கவில்லை

சண்டை பிடிக்கிறாள்.

சண்டையின் முடிவில்  மருமகள் காவல் துறையில் புகார் கொடுக்கிறாள்...  தன் மாமனார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக!

விளைவு....... அந்த வயதான  தம்பதி-மாமனார்&மாமியார்-தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சட்டம்,சமூகம் காட்டும் இரக்கத்தைத் தவறாக்கப் பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்

எனக்கு ஒரு கதை தெரியும்.

ஒரு அன்பான கணவனின் கதை.

மனைவிக்கு அளித்த சுதந்திரத்தை அவள் தவறாகப் பயன்படுத்த அதனால் வாழ்க்கை சிதைந்து போனவன்.

அவன் நல்லூழ்,தெய்வஅருள் காரணமாக சிக்கல் எதுவுமின்றி மணவிலக்குப் பெற்று,ஒரு சந்நியாசி போல் வாழ்பவன்.

 அதை தொடர் பதிவாகத் தரலாம்;

ஆனால் ஏனோ தயக்கமாக இருக்கிறது.

பார்க்கலாம்!