ரயில் நிலையம்.
நடை மேடையில் ஒரு கோடி.
அங்கேயே வாழ்ந்து அங்கேயே பணிபுரியும் சிறுவர்கள்
கூட்டம்….
ஒரு பெண்ணைச் சுற்றி…
அந்தப்பெண்....
அவர்கள் நலனுக்காகப் போராடுபவள்.
சிறுவர்கள் ஏன் வீட்டை விட்டு ஓடிப் போகிறார்கள்
என்பதைப் பற்றிய ஒரு ஆய்வு மேற் கொண்டிருக்கும் பெண்.
சில மாதங்களுக்கு முன் இதே ரயில் நிலையத்தில் நிகழ்ந்த
ஒரு சம்பவமே அவளை அந்தச் சிறுவர்களுக்காகப் பணி செய்யத் தூண்டியது.
அந்தநாள்….
ரயில் நிலையத்தில் கிடைக்கும் சீசாக்கள்,காகிதம்,குப்பைகளை
விற்றுச் சம்பாதிக்கும் ஒரு சிறுவன்,ஒடும் ரயிலில் அகப்பட்டுச் சின்னா பின்னமான நாள் .
அதை அவள் பார்க்க நேர்ந்தது.
நீண்ட நேரம் அவ்வுடல் தண்டவாளத்தின் அருகிலேயே கிடந்தது.
மனிதர்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள்-எதுவுமே
நடக்காத மாதிரி.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெகு நேரமாயிற்று
அந்த நிகழ்ச்சி அவளை வெகுவாக உலுக்கியது.
எந்தவித பாதுகாப்பும் இல்லாத,யாராலும் கண்டு கொள்ளப்படாத
அந்தச் சிறுவர்களின் வாழ்வுக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தாள்.
தேசிய சிறுவர் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய
சிறுவர் நலனுக்காகச் சில வழிகாட்டுதல்கள் விதித்துள்ளது.
அவை அமுல்
படுத்தப் பட வேண்டும் என நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத்
தொடர்ந்திருக்கிறாள் அப்பெண்.
பல அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து
அச்சிறுவர்களுக்காகப் போராடி வருகிறாள், இந்த,வசதியான குடும்பத்தில் பிறந்த,பட்ட
மேற்படிப்பும் முனைவர் பட்டமும் பெற்ற இந்த இளம் பெண்.
இவள் பெயர்...குஷ்பு ஜெயின்...
இடம்...புது தில்லி ரயில் நிலையம்.
அவளுக்கு என் தலை தாழ்ந்த
வணக்கங்கள்.
ஆதாரம்:டைம்ஸ் ஆஃப் இந்தியா
ஆதாரம்:டைம்ஸ் ஆஃப் இந்தியா