Tuesday, August 28, 2012

மகத்தான வெற்றி அடைந்த பதிவர் திருவிழா!

26 ஆம் தேதி விழா முடிந்து,அதைப்பற்றி எல்லோரும் பதிவுகள் போட்டு ஓயும் நேரத்தில் இதோ ஒரு பதிவு.

விழாவுக்கு முன்னால் எத்தனையோ சச்சரவுகள்.

பதிவுகளில் மோதல்கள்.

ஆனால் மோதிக் கொண்டவர்களே விழாவன்று கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டார்கள்.

பல பெண் பதிவர்கள் வந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்ல,மற்ற நாடுகளிலிருந்தும் பதிவர்கள் வந்திருந்தார்கள்.

சிறப்பான ஏற்பாடுகள்.அருமையான உணவு.

இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும்?

பலரது பதிவுகளை படித்துதான்.

நான்தான் விழாவுக்குப் போகலையே!

சும்மா நாலு இடுகை கிறுக்கிவிட்டு,நானும் ஒரு பதிவர் என்று அங்கு போய் நிற்பதா?

என்னவென்று அறிமுகம் செய்து கொள்வது இந்த முகத்தை?

அதனால் போகவில்லை.

விழாவின் வெற்றி கண்டு மகிழ்கிறேன்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.



2 comments:


  1. //சும்மா நாலு இடுகை கிறுக்கிவிட்டு,நானும் ஒரு பதிவர் என்று அங்கு போய் நிற்பதா? //

    நீங்கள் பதிவராகப் பதிவு செய்துவிட்டாலே பதிவர் தான்!, அதாவது வாக்காளர் அட்டையில் பெயர் வந்தால் வாக்காளர் போல், அதனால் செல்லாததற்கு என் வலிய கண்டனம்.

    ReplyDelete
  2. பதிவு அருமை நண்பரே.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete