Showing posts with label ஆஸ்கார். Show all posts
Showing posts with label ஆஸ்கார். Show all posts

Monday, February 18, 2013

பறவைக் கழிவை முகத்தில் பூசும் நடிகைகள்!!



வாங்க மேடம்!என்ன முக அழகு படுத்தல்தானே?

“ஆமாம்!ஆஸ்கார் விழாவுக்குப் போறேன் .முகம் பள பளன்னு மின்னணும்.புதுசா ஏதாவது முறைகள் இருக்கா?”

“இருக்கு மேடம்!இப்பத்தான் ரொம்பப் புதுசா ஒரு தயாரிப்பு வந்திருக்கு.அதை வைச்சு முக அழகு படுத்தினா முகம் பளிச்சுன்னு இருக்கும்:சுருக்கம் எல்லாம் போய் பத்து வயது குறைஞ்சுடும்!”


“வாவ்! அதையே செய்திடுங்க!இதிலே இருக்கும் பொருள் என்ன?”

மேடம்!இது பறவைகளின் எச்சத்தில் செய்தது!ரொம்ப விலை உயர்ந்தது.உங்களை மாதிரிப் பிரபலமானவங்கதான் செய்துக்க முடியும்”

(எந்தக் கழிவுல செய்தா என்ன?முகம் அழகானாச் சரிதான்!)

”அதோட  என்னோட முடியையும் அழகு படுத்தணும் ”

“சரி மேடம்!அதுக்கும் புதுசா ஒரு தைலம் வந்திருக்கு.காளை மாடு இருக்கில்ல(எங்க இருக்கு, அதுதான் பூட்ச்சே!) அதோட விரைக் கொட்டையை நசுக்கிச் செய்தது.முடி அப்படியே அலை அலையா இருக்கும்!”

மேலே சொன்னதெல்லாம் கற்பனையல்ல,நிஜம்!

இந்த ஆண்டு ஆஸ்கார் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் தங்களை அதற்கு அழகு படுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சிகளின் ஒரு சிறு பார்வை இது!

இன்னும் எத்தனையோ!

250000 டாலர் செலவில் கருப்பு வைர நகப்பூச்சு!

முன்பு ஒரு நடிகை தன் உடலில் அட்டைகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சச் செய்தாராம்(டெமி மூர்)-ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க!!

இந்த ஆண்டு முகச் சுருக்கங்களை நீக்கிப் பொலிவு தர,கொஞ்சம் ரத்தம் எடுத்து அதிலிருந்து சில மூலகங்களை நீக்கி அதனுடன்,சரும நிரப்பிகளைச் சேர்த்துத் தோலில் உட்செலுத்தும் புதிய முறை வந்திருக்கிறதாம்!

பறவை எச்சம்,காளை மாட்டின் கொட்டை,அட்டைக்கடி இன்னும் என்ன?

பூனை மூத்திரம்,(புனுகு என்பதே ஒரு வகைப் பூனையின் கழிவுதான்),சிங்கப்பல் பஸ்பம்(நிஜ சிங்கப்பல்,சில மனிதர்களுக்கு இருக்குமே அந்த சிங்கப்பல்லல்ல) இப்படி ஏதாவது வருமோ!

அடக்கடவுளே!


Tuesday, January 15, 2013

யாருக்கு ஆஸ்கார்?!



ஆஸ்கார் விருது பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம்.

இந்த விருது பற்றி நமக்கு என்ன தெரியும்?

திரைப்படத் துறையின் உயரிய விருது என்பது தெரியும்.

அமெரிக்காவில் இயங்கும்,சலனப் பட க் கலை ,அறிவியல் கழகத்தினால்  திரைப் படத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் விருது என்பது தெரியும்.

இது எந்த ஆண்டு முதலில் வழங்கப்பட்டது,தெரியுமா?

1929 ஆம் ஆண்டு,ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஓட்டலில் ஒரு சிறிய விழாவில் முதல் முறை இவ் விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவை ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை;

காரணம் விருது வழங்குவதில் எதிர்பார்ப்பு ஏதும் இன்றி மூன்று மாதங்களுக்கு முன்பே விருது பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப் பட்டு விட்டன!

எதிலுமே சஸ்பென்ஸ் இருந்தால்தானே சுவாரஸ்யம்!

மொத்தம் 24  திரைப்படத் துறைகளுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.

விருதுடன் வழங்கப்படும் அந்தச் சிலையை வடிவமைத்தவர்,எம்ஜிஎம் படப்பிடிப்பகத்தின் கலைத் துறையின் தலைவர் செட்ரிக் கிப்பன்ஸ் என்பவர்..

ஆஸ்கார் என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து சர்ச்சையே இருக்கிறது.

நடிகை பெட்டி டேவிஸ்,(இவர் அக்கழகத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றவர்), தன் முதல் கணவர் நினவாகத் தானே அப்பெயரை வைத்ததாகச் சொல்லி யிருக்கிறார்

கழகத்தின் நிர்வாகச் செயலாளர் மார்கரெட் ஹார்ரிக் அவர்களின் மாமாவை உருவத்தில் அச்சிலை ஒத்திருப்பதால் அப்பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது!

பரிசு பெற்றவர்களோ,அவர்கள் வாரிசுகளோ இச்சிலைய விற்க விரும்பினால் சட்டப்படி முதலில் கழகத்துக்கே அதை ஒரு டாலருக்கு விற்பனைக்கு அளிக்க வேண்டும்.

கழகத்தில் வாக்களிக்க உரிமையுள்ள 6000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது .

இவர்கள் படத்துறையின் 15 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டு நம் பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ யின் பெயரும் பட்டியலில் உள்ளது;

அதற்குள் அவரது அப்பாடல் பற்றிச் சச்சரவு எழுந்து விட்டது!

(தகவல்:டைம்ஸ் ஆஃப் இந்தியா)