Thursday, July 25, 2013

எங்கேடி நம்ம குழந்தை?...



ஒருவன் ஒரு புதுக்கார் வாங்கினான்.

அக் காரின் சிறப்பு என்ன என்றால்,அது ஒரு ரோபோ கார்.

 அவன் என்ன கட்டளையிட்டாலும் அதைத் தானே செய்து முடிக்கும்.

அது வந்த பின் அவன் எங்கெல்லாம் சென்று வரவேண்டுமோ அங்கெல்லாம் அதை அனுப்பி விட்டு நிம்மதியாக இருக்க ஆரம்பித்தான்;

அதுவும் அவன் கட்டளைகளைச் சரியாக நிறைவேற்றி வந்தது.

ஒரு நாள் அவன் மனைவி சொன்னாள்”எனக்கு இன்று மிகக் களைப்பாக இருக்கிறது.எனவே உங்கள் காரை அனுப்பிக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சொல்லுங்கள்”

அவனும் காரிடம் “என் குழந்தைகளை அழைத்து வா”எனச் சொல்லி அனுப்பினான்.

கார் வெகு நேரம் திரும்பி வரவில்லை.

அவனுக்குக் கவலை அதிகமாகிப் போலீஸில் புகார் செய்யப் புறப்படும் நேரத்தில் கார் வந்து சேர்ந்தது.

 “உங்கள் குழந்தைகள்”என்று சொல்லி நின்றது.

காரிலிருந்து எதிர்வீட்டுச் சிறுமியும்,பக்கத்து வீட்டுப் பையனும்,அவன் ஆபீஸ் டைப்பிஸ்ட் மகளும்,அவன் மனைவியின் நண்பியின் பையனும் இறங்கினர்.

மனைவி கோபத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்”இவர்களெல்லாம் உங்கள் குழந்தைகளா?”

அவன் கேட்டான்”அது இருக்கட்டும் .ஆனால் காரில் நம் குழந்தைகள் இல்லையே அதற்கு என்ன சொல்கிறாய்?”

ஹய்யோ ஹய்யோ!...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)))))))

26 comments:

  1. குட்டன் என்றாலே குறும்புதான்.ஆனாலும் இந்த பதிவில் உள்ள நகைச்சுவையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவா?!
      நன்றி சார்

      Delete
  2. ஹாஹா ஆமா இந்த கார் எந்த கம்பெனி

    ReplyDelete
    Replies
    1. குட்டன் ஸ்பெசல்!
      நன்றி

      Delete
  3. ஹா ஹா இரண்டு பேரும் செமையா மாட்டிக்கிட்டாங்க

    ReplyDelete
    Replies
    1. :)
      தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்!
      நன்றி

      Delete
  4. ஹா ஹா ஹா செம கதை.. சரியான குசும்பு குட்டன்

    ReplyDelete
    Replies
    1. பிரிக்க முடியாதது...குட்டனும் குசும்பும்!
      நன்றி சீனு

      Delete
  5. நல்ல குசும்பான கதை! வாழ்த்துக்கள்! உங்கள் தொடர்பதிவு கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டது! நேரமிருப்பின் ஒருதரம் என் தளம் வாருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் என் அழைப்பை ஏற்றமைக்கும் நன்றி சுரேஷ்

      Delete
  6. Replies
    1. இருக்கணும்!
      நன்றி முரளிதரன்

      Delete
  7. ஹா ஹா... (உங்களின் வயது 'A'bove 60...?)

    ReplyDelete
    Replies
    1. என்ன அநியாயம்!என் வலைப்பூவின் தலைப்பில் பாருங்கள்..”இளைஞர்களுக்காக,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ”!ஒரு இளைஞர் வயது எப்படி 60க்கு மேல் இருக்க முடியும்?செப்டெம்பர் 1 ஆம்தேதி பாருங்கள்!
      நன்றி

      Delete
  8. உங்க கற்பனையா இது..?

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க!படிச்சதுதான்!
      நன்றி

      Delete
  9. நாம அடி வாங்காம தப்பிக்கணும்..

    ReplyDelete
  10. pபோறப்போக்கிலே நீங்க சொல்றதும் சாத்தியமாகலாம்

    ReplyDelete
  11. செத்தாண்டா கொமாரு, அவளும் மாட்டியாச்சு ஹா ஹா ஹா ஹா....!

    ReplyDelete
  12. ஹா ஹா ஹா .. உங்களுக்கு மட்டும் எப்படி இம் மாதிரி கதைகள் சிக்குகிறது

    ReplyDelete
  13. குறும்பு என்றாலும் கரும்பு!

    ReplyDelete
  14. உங்க குறும்புக்கு எல்லையே இல்லை!.... :)

    ReplyDelete