Friday, January 17, 2014

புத்தகக் கண்காட்சி-ஒரு வித்தியாசமான பார்வை..படங்களுடன்!

விடுமுறை நாட்கள் முடிந்தபின் இன்று புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மாலை 3.30 மணி அளவில் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தானியில் 4 மணி அளவில் கண்காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ,மைதானத்தை அடைந்தேன்.சென்ற ஆண்டு கண்காட்சி நடக்கும் இடத்தை அடையும்போதே களைப்படைந்தது போல் இல்லாமல் இந்த ஆண்டு இலவச வாகன  வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்  எளிதாக  கண்காட்சி அரங்கை அடைந்தேன்.


    இலவச ஊர்தி
    திரும்புகையில்


பத்து ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு அரங்குக்குள் நுழைந்தேன்

நுழை வாசல்    
      உள்ளே நுழையும்போதே அதிகபட்சம் 2.30 மணி நேரமே செலவழிக்கத்                        திட்டமிட் டிருந்த படியால்,ஸ்டால்களைத் தேர்ந்தெடுத்து என் சுற்றலைத் துவங்கினேன்.மொத்தம் பத்து அரங்குகளுக்குச் சென்றிருப்பேன்!இன்று விடுமுறை நாளாக இல்லாததால் பதிவர்கள் யாரையும் பார்க்கவில்லை.அப்படி யாராவது வந்திருந்து அவர்களை நான் பார்த்தாலும் அவர்களுக்கு என்னைத் தெரியாது...ஒரு சோட்டா பதிவர்தானே!.டிஸ்கவரியிலும் யாரும் இல்லை.திரு வேடியப்பன் பிஸியாக இருந்தார்.

                                            

                                                     டிஸ்கவரியில் வேடியப்பன்
நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை,வாங்கிய புத்தகங்களின் சாம்பிள் ஒன்று கீழே!

                                          


 அவ்வாறு சென்று கொண்டிருந்தபோதுதான் கீதா பிரஸ் ஸ்டாலில் ஒரு பதிவரைப் பார்த்தேன்.அவரை எனக்குத் தெரியும்.நான் பார்த்தபோது சன் டி.வி. பெண் நிருபர் அவர் முகத்துக்கு நேராக மைக்கைப் பிடித்திருக்க அவர் காமிராவைப் பார்த்தபடி ஆன்மீகம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.அந்தப் பதிவர் திரு.சென்னைபித்தன் அவர்கள்!அதைப் படம் எடுக்க மறந்து விட்டேன்!

இம்முறை ஓய்வெடுக்கவும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.நிம்மதியாக அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்

                                                   
   
     வெளியே வந்தபின் அரங்கில் ஏதோ நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்
                                       

               பஸ்ஸில் ஏறி கேட்டை அடைந்து தானியில் ஏறி வீட்டை வந்தடைந்தேன்!
                                
      இன்னொரு நாள் மீண்டும் போக ஆசை!.......இன்ஷா அல்லா!
                                  

 லேட் டிஸ்கி:    ”நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை” என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்.ஆனால் பின்னூட்டங்களைக் காணும்போது நான் முப்பது புத்தகம் வாங்கியதாகத் தவறாகப் புரிந்து கொளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.மன்னிக்க!
                                                                                                                                                                        








                                                                                                                                                                              

.

9 comments:

  1. 30 புத்தகமா...? வாழ்த்துக்கள்...

    சன் டி.வி. பேட்டி எடுத்த அன்பரின் படம் எனக்கு மட்டும் அனுப்பவும்... ஹா... ஹா...

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு. அற்புதமான படங்கள். உள்ளதை உள்ளபடி உண்மையாகச் சொல்லியுள்ளது மிகவும் பிடித்துப்போனது. பாராட்டுக்கள், ஐயா. வாழ்த்துகள்.

    சோட்டா அல்ல படா மட்டுமே ! ;)))))

    ReplyDelete
  3. 30 புத்தகம் நல்ல ஒரு முயற்ச்சி!

    ReplyDelete
  4. 30 புத்தகமா!? பொறமையா இருக்குப்பா!

    ReplyDelete
  5. நான் இன்னும் புத்தகக் கண்காட்சிக்கு போகவில்லை. சென்றமுறை வெளிவாயிலிலிருந்து நடக்கவேண்டியிருந்தது. அதை இப்போது இலவச ஊர்தி ஏற்பாடு செய்து சுலபமாக்கிவிட்டார்கள் என அறிந்து மகிழ்ச்சி. சென்னைப் பித்தன் அவர்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்ததை படம் பிடித்து வெளியிட்டிருக்கலாம். வீணே அவருக்கு எதற்கு மேலும் விளம்பரம் என நினைத்துவிட்டீர்கள் போலும்!
    தங்கள் பதிவைப் படித்தபோது ஒரு Virtual Tour போல் உணர்ந்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நான் இன்னும் செல்லவில்லை! திங்களன்று போக உத்தேசம்! பார்ப்போம்! நன்றி!

    ReplyDelete
  7. வாழ்த்துகள்...... எங்களுக்கு இங்கே செல்ல வாய்ப்பில்லை!

    ReplyDelete
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete