Showing posts with label பண்டிகை. Show all posts
Showing posts with label பண்டிகை. Show all posts

Friday, September 25, 2015

புண்ணாக்கு,புண்ணியகோடி,புதுக்கோட்டை!



வழக்கமாக அல்லது அநேகமாக அனைவரும் பதிவு எழுதிவிட்டு அதன் பின் பொருத்தமான தலைப்பு வைப்பார்கள்.

சில நேரங்களில் தலைப்பு வைத்துவிட்டு அதற்குத் தக பதிவு எழுதுவதும் உண்டு.

நேசித்து தலைப்பு வைத்தபின் எழுதுக
யோசித்து அதற்குத் தக!

அப்படி எழுதுகிறேன் இன்று!

இப்படி ஒரு தலைப்பு வைக்க ஒரு  உந்துதல் உண்டு!

புண்ணாக்கு 80 எள்,தேங்காய்,கடலை ஆகியவற்றை ஆட்டி எண்ணை டுத்தபின் மிஞ்சும் சக்கை.

பிண்ணாக்கு என்பது புண்ணாக்கு ஆகி விட்டது.

மாட்டுக்குத் தீவனமாகவும் வைக்கப்படுவது இது.

சில மனிதர்களைப் புண்ணாக்கு என்று வர்ணிப்பதுண்டு!

காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் சிலேடையாக வருகிறது புண்ணாக்கு...

“ஆடிக்குடத்தடையும் ஆடும்போதே இரையும்
 மூடித் திறக்கின் முகங்காட்டும்-ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடு பாம்பெள்ளெனவே ஓது”

இது உங்கள் அனைவருக்கும் தெரிந்தபாடல்தான்.பொருளும் தெரிந்தவர்கள்தான் நீங்கள்.
எனவே இதைப்பற்றி வேறெதுவும் எழுதப்போவதில்லை!

புண்னியகோடி 80 யார்? அன்பேவா படத்தில் டி ஆர் ராமசந்திரன் புண்ணாக்கு வியாபாரி
யாக வருவார் .

அவர் பெயர் புண்ணாக்கு புண்ணியகோடி!


புதுக்கோட்டைதான் இன்றையா சூடான செய்தி!அங்கு நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு பற்றி எழுதாதவர் பதிவரே அல்ல என்பது போல் அனைவரும்  வரிந்து கட்டிக் கொண்டுஅது பற்றி ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.நானும் என் பங்குக்கு ஏதோ எழுதி விட்டேன் முன்பே.இன்னும் 15 நாட்கள்தான்.சிறுவர்களாக இருந்தபோது தீபாவளியை எதிர்பார்த்து, நாட்களை எண்னியவாறே காத்திருப்போம்!அது போன்ற ஒரு மன நிலையில் இருக்கிறார்கள் பதிவர்கள்.

பாக்கியவான்கள் போய் வாண வேடிக்கையோடு கொண்டாடுங்கள்!


Friday, December 28, 2012

பண்டிகைகளும் பலகாரங்களும்!



இந்த இந்துப்பண்டிகைகள் இருக்கின்றனவே,அவை நன்றாக வித விதமான உணவுகளைச் சாப்பிடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டவையோ எனத் தோன்றுகிறது!

பாருங்களேன்…..இன்று திருவாதிரை..

சேந்தனார் பேரைச் சொல்லிக் களி,அதற்குத் துணையாக ஏழு கறிக்கூட்டு.களியில் கிடக்கும் முந்திரிப் பருப்புகள்,களியில் கொஞ்சம் நெய் ஊற்றிச் சாப்பிட்டால்...ஆகா !

அடுத்து பொங்கல் திருநாள்.நெய் சொட்டச் சொட்டச் சர்க்கரைப் பொங்கல்(ஆமாம்,அது வெல்லப் பொங்கல்தானே,பின் ஏன் சர்க்கரைப் பொங்கல் என்று சொல்கிறோம்?!),மெது வடை.பொழுது போகவில்லை என்றால் கடித்துத் துப்பக் கரும்பு! பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று பல வீடுகளில் போளி செய்வார்கள்.அந்தப் பருப்புப் போளியில் நல்ல நெய் ஊற்றிச் சாப்பிட வேண்டுமாம்…(ஹத்து போளி டப்பா நெய்!)

ராமநவமி!பானகம்,நீர்மோர்,வடைப் பருப்பு எனவித்தியாசமான ஐட்டங்கள்!

ஜன்மாஷ்டமி!குழந்தை கண்ணனின் பேரைச் சொல்லி நொறுக்குவதற்கு முறுக்கு, சீடை, அப்பம் வகையறாக்கள்.வெண்ணை வேறு.எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வெண்ணையில் சர்க்கரை சேர்த்து உருட்டி விழுங்குவார்கள்....சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!

விநாயகர் சதுர்த்தி...விநாயகருக்கு மோதகம்(கொழுக்கட்டை) மிகவும் பிடிக்கும்,எனவே அவர் கையிலேயே மோதகத்தைக் கொடுத்து விட்டோம்!மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலைக் குறிக்கும்!இந்தக் கொழுக்கட்டையிலேயே வெல்லக் கொழுக்கட்டை,உப்புக் கொழுக்கட்டை தவிர சிலர் எள்ளுக் கொழுக்கட்டை வேறு செய்வார்கள்.இத்தோடு பல விதமான பழங்கள் ”கபித்த, ஜம்புபலம்” என்று சொல்வார்கள்.அதாவது விளாம்பழம், நாவல்பழம்.அளவில்லாமல் கொழுக் கட்டை   தின்றால்,இந்தப் பழங்கள் ஜீரணத்துக்கு உதவுமாம்!

விதவிதமான இனிப்புகள் சாப்பிடுவதற்காக இருக்கவே இருக்கிறது தீபாவளி.வெறும் இனிப்பு போதுமா?காரம்,மிக்சர்,காராசேவு,ஓமப்பொடி என்று பலவும்.

கார்த்திகையன்று பொரி..அவல் பொரி,நெல்பொரி என இரண்டு வகைகள்.வெல்லப்பாகில் மூழ்கியவை.பலர் அப்பம்,வடை,அடையும் கூடச் செய்வார்கள்.

இவை தவிர பல சாதாரண விசேட தினங்களில் கண்டிப்பாகப் பாயசம் உண்டு…..சேமியா பாயசம்,அவல் பாயசம்,பால் பாயசம்,காரட் பாயசம்,பாதாம் பாயசம்,கேரளாவின் அடைப் பிரதமன்,சக்கைப் பிரதமன் என்று பெரிய லிஸ்ட்!மெது வடை,மசால் வடைகளும் உண்டு.மசால் வடைக்குப் வேறு பெயர்கள் பருப்பு வடை,ஆம வடை(ஆமை முதுகு போல் இருப்பதாலா?!)

ஆனால் அந்த நாளில் அதிக உடல் உழைப்பு இருந்தது,சாப்பிட்டது செரிமானம் ஆயிற்று. 

இந்நாளில் …

மறுநாள் சீரண மாத்திரைகளே துணை!