Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Wednesday, March 26, 2014

குமட்டுகிறது!



அருவருக்கத்தக்க ஏதாவது ஒன்றைப் பார்த்தால்,என்ன நடக்கும்?

நாம் சொல்வோம்—குமட்டுகிறது(உமட்டுகிறது,ஒமட்டுகிறது இப்படியும்)

அந்தக் குமட்டலுக்குக் காரணம் அந்தப் பொருள்,அந்தச் செயல்,அந்த இடம் இருக்கும் நிலை.

அதன் அசிங்கம்

ஒரு முறை எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர் சொன்னார்”கழிப்பறை நாறுகிறது. குமட்டு கிறது”என்று.
 
நேற்று ஐ பி எல் சூதாட்ட  வழக்கில் தீர்ப்புச் சொன்ன உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்”திரு.சீனிவாசன் கிரிக்கெட் வாரியத் தலைவராக நீடிக்கும் வரை அவரது மருமகன் மெய்யப்பன் மீதான சூதாட்டம் மற்றும்போட்டி நிர்ணயம் ஆகிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நியாயமாக வெளிப்படையாக இருக்காது என்பது நன்கு தெரிந்திருக்கும் நிலையில் அவர் பதவியில் நீடிப்பது ’குமட்டுகிறது(nauseating)’”

அவர் இரு நாட்களில் பதவி விலக வில்லையெனில் நீதிமன்றம் இது சம்பந்தமான உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

என்ன அழகான சொற் பயன்பாடு!இதை விடச் சிறப்பாக இடித்துரைக்க முடியுமா?

வாழ்க்கையில் இந்தக் குமட்டல் வேறு காரணங்களினாலும் வருவதுண்டு.

குறிப்பாகக் கருவுற்றிருக்கும் பெண்களுக்குக் காலை நோய் என்று சொல்லப்படும் இந்தக் குமட்டல் வருவதுண்டு.

சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்து விடுவார்கள்.

அது அவர்களுக்கு ஒரு இன்பமான அவஸ்தை.

உறவினர்களுக்கோ மகிழ்ச்சிதரும் ஒரு செய்தி!

அந்தக்குமட்டல் மற்றவர் ரசிக்கும்,மகிழும் குமட்டல்.

ஆனால் முதலில் சொன்ன குமட்டல் அருவருப்பால் விளைந்த குமட்டல்.

குமட்டலை ஏற்படுத்தியது எதுவோ அது சரி செய்யப்பட்டால்தான் குமட்டல் நிற்கும்.

ஒரே சொல்லில் ,சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டார்கள் நீதிபதிகள்!


 

Wednesday, October 9, 2013

செய்திகள்;வாசிப்பது.....

இன்று படித்த ஒரு செய்தி என்னைக் கோபப்பட வைத்தது.அறியாத சிறுவர்கள் விளைவு களைப் பற்றித் தெரியாமல்  சில செயல்களில் விளையாட்டாக ஈடுபடலாம்.ஆனால் வேலை பார்க்கும் இளைஞர்கள்,விளைவைப் பற்றியே சிந்திக்காமல் ஒரு செயலை ’விளையாட்டு’க் காகச் செய்யலாமா?

அம்பத்தூரில் ஒரு கார் சேவை மையத்தில் வேலை பார்க்கும் இரு இளைஞர்கள்,தங்களுடன் பணிபுரியும் கார்த்திக் என்னும் இளைஞனைப் பிடித்து அவன் கால்சராயைக் கழட்டி அவன் பின்புறத்தில் காற்று அடிக்கும் கருவியின் குழாயைச் செருகிக் காற்றடித்தனராம்.அவன் வயிற்றில் காற்று நிரம்பி மயக்கமடையவே அவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.அங்கிருந்து போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளைஞன்,உடல் நேரானதும் போலீஸில் புகார் கொடுக்க,அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இது என்ன விளையாட்டு?விபரீத விளையாட்டு?


நேற்றுப்படித்த ஒரு செய்தி


திருமாலின் தசாவதாரங்கள். எவை?

மத்ஸ்ய,கூர்ம,வராக,வாமன,நரசிம்ஹ,பரசுராம,ராம,கிருஷ்ண,பலராம.கல்கி இவையென்று சொல்லப்படுகிறது.வடக்கில் புத்தர் ஒரு அவதாரம் எனச் சொல்கிறார்கள்.

அதாவது,மீன்,ஆமை,பன்றி,வாமனன்,நரசிம்ஹம்,பரசுராமர்,ராமர்,கிருஷ்ணர்,பலராமர்.கல்கி.

நேற்று இராமேஸ்வரம் கோவிலில் பன்றி புகுந்து விட்டதாம் !

நகராட்சி ஊழியர்கள் அப்பன்றியைப் பிடிப்பதற்காகத் துரத்தும்போது அது அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு,கோவிலுக்குள் நுழைந்து இரண்டாவது பிரகாரம் வரை சென்று விட்டதாம்! அதை விரட்டிய பின் குடம்குடமாகத் தண்ணீர் ஊற்றிக் கோவில் பிரகாரத்தைச் சுத்தம் செய்தனராம்;விசேட பூசைகளும் செய்யப்பட்டனவாம்

இச்செய்தித் தலைப்பைப் படித்ததும் எனக்குத் தோன்றிய  நகைச்சுவையான எண்ணம்,பன்றி திருமாலின் அவதாரம் தானே ,எனவே இதில் பிரச்சினை என்ன இருக்கிறது என்பதே!

செய்தியை முழுவதும் படிக்கும்போது, என் கருத்தையே மதுரை மாவட்ட விஸ்வ இந்து பரிஷத்தின்  தலைவர் சொல்லியிருப்பது தெரிய வந்தது!

சரிதான்!இனிமேல் ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது எனச் சொல்லாதீர்கள்.(இதற்கு வேறு பொருளும் சொல்வர்)

ஆமை திருமாலின் அவதாரம்!

Friday, May 17, 2013

பெர்னாட்ஷா சொன்னது பாதி சரி!






டைடானிக் பற்றி அனைவருக்கும் தெரியும்.

கோலாகலமாக(பெப்சிகலமாக!-மின்னல் கணேஷ்) பயணம் தொடங்கிய அந்த மிதக்கும் நகரம்,பனிப்பாறையில் மோதிக் கடலில் மூழ்கியது .

பனிப்பாறைகளின் பிரச்சினையே இதுதான்.

வெளியில் தெரிவது அதன் உச்சிமுனை மட்டுமே.

மறைந்திருப்பது எவ்வளவு பெரிதோ தெரியாது.

இதுவே ஓர் ஆங்கில மொழிமரபு பிறக்கக் காரணமாக இருந்தது.

ஒரு சிறிய சம்பவத்தைப் பார்க்கும்போது அதன் மறைவில் இன்னும் என்ன இருக்குமோ என்பதைக் குறிப்பிட”tip of the iceberg”- என்று சொல்வது வழக்கம்.

அது போல் ஒரு பனிப்பாறையின் உச்சிமுனை நேற்று வெளி வந்திருக்கிறது.

ஐ.பி.எல் லில் கிரிக்கெட் சூதாட்டத்துக்காக மூன்று ஆட்டக்காரர்கள் கைது செய்யப்பட் டிருக்கிறார்கள்.

ஆட்டங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து வந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

பெர்னார்ட்ஷா சொன்னார்”பதினோரு முட்டாள்கள் ஆடுகிறார்கள்;பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்” என்று.

அவர் சொன்னதில் பாதி சரி-----பின்பாதி.

ஆனால் பதினோராயிரம் அல்ல,கோடிக்கணக்கில் பார்வையாளர்கள் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முதல் பாதி சரியல்ல---ஆடுபவர்கள் முட்டாள்களல்ல.

 விளையாடுவதற்காக,லட்சம்,கோடிக்கணக்கில்  பணம் பெற்றுக் கொண்டு அது போதாமல், சூதாட்டத்துக்குத் துணை போய் பார்ப்பவர்களை முட்டாள்கள் ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஹாக்கியில் கொடிகட்டிப் பறந்த நாம் இன்று கேவலமான நிலையில் உள்ளோம்.

ஒரு ஹாக்கி ஆட்டக்காரனாக எனக்கு மிக வருத்தம்.

ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல்—வேறு எந்த விளையாட்டுக்குமே கொடுக்கப் படாமல்-நாள்கணக்கில் நேர விரயமாக்கும் கிரிக்கெட்டைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் நமக்கு இனியாகிலும் புத்தி வருமா?

Monday, December 31, 2012

அதிதி தேவோ பவ!



நேற்றைய கிரிக்கெட் பந்தயம்.
நடுவர்களில் ஒருவர் திரு.ரவி-இந்தியர்.
அவர் எடுத்த இரண்டு தவறான முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியவை.
பாகிஸ்தானுக்குச் சாதகமானவை.
முதலாவது,சதம் அடித்த ஜாம்ஷெட் 50 ஐ நெருங்கிக் கொண்டிருந்த போது,அஸ்வின் வீசிய பந்து, மட்டையின் உள் விளிம்பில் பட்டுச் செல்ல முதல் ஸ்லிப்பில் ஷேவாக் அதைப் பிடித்தார்.
ஆனால் நடுவர் அதை அவுட் இல்லையெனச் சொல்லி விட்டார் .
அடுத்து அஸ்வினின் நேராக வந்த பந்தில் யூனுஸ்கான் பெருக்க முயன்று காலில் வாங்கி, சரியான எல்.பி.டபிள்யு ஆக,அதையும் மறுத்து விட்டார்.
விளைவு பாகிஸ்தான் வென்றது.சரியான முடிவு எடுத்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கலாம்.
சரிதான்...
அதிதி தேவோ பவ!(விருந்தினரே கடவுள்)

(இதுவே இந்தியாவுக்குச் சாதகமாகத் தவறான முடிவு எடுத்திருந்தால் வாயை மூடிக் கிட்டு இருப்ப யில்ல?!அம்பையர்,நாள் முழுவதும் நிற்க வேண்டும்.பந்து வீசும் போது,எண்ண வேண்டும், வீசுபவரின் கால்,கோட்டைக் கடக்காது இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும், மட்டையில் படும்போது கவனிக்க வேண்டும் ,கால் மட்டை இரண்டிலும் படும்போது முதலில் எங்கு பட்டது எனப் பார்க்க வேண்டும், சரியான கேட்சா எனக் கவனிக்க வேண்டும்,இப்படி எத்தனையோ;அவரும் மனிதர்தானே.ஒரு கணநேர நிகழ்வைக் கொண்டு முடிவு எடுக்கும்போது தவறு நிகழலாம்.)
..........................................................................
ஒரு அயல்நாட்டுத் தம்பதி தெரியாத்தனமாக சென்னை நகரப் பேருந்தில் ஏறினர், பயங்கரக் கூட்டம் .கூட்டத்தில் நசுக்குண்டு சிறிது நேரம் சென்று இருக்கை கிடைத் தது.ஒரு கல்லூரி மானவர்கள் சிலர்    ஏறி அயல் நாட்டவரை பார்த்த்தும்,தங்கள் ஆங்கிலத்தில் உரக்கப் பேசிக்கொண்டும்,கலாட்டா செய்து கொண்டும் வந்தனர்.ஒரு மாணவர் அவர்கள் இருக்கையை ஒட்டிய ஜன்னலில் வெளிப்புறம் தொங்கி யவாறே கலாட்டா செய்து வந்தார்.
போக்குவரத்துக் காவலர் ஒருவர் வந்து நிலமையைச் சரி செய்தார்.
மிக நல்ல அபிப்பிராயம்  எற்பட்டிருக்கும்!
அதிதி தேவோ பவ!

(செய்திகள் உபயம்:டைம்ஸ்  ஆஃப் இந்தியா)
.............................................................
இந்த வலைப்பூவை இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் மலரச் செய்தேன்.
இரண்டு முறை வலைச்சர அறிமுகம் கிடைத்தது.
ஒரு பதிவர் என்னை இந்த ஆண்டின் நம்பிக்கையளிக்கும் பதிவர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தமிழ்மண ரேங்க் 28 .
இதற்கெல்லாம் காரணம் இந்த வலைப்பதிவின் விருந்தினர்களான நீங்கள்தான்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.
அதிதி தேவோ பவ!
....................................................

Thursday, December 6, 2012

எதெல்லாமோ பறக்குதே!


                          1-2-2012;ஆஸ்திரேலியா .தோனி மட்டையைப் பறக்க விடுகிறார்!


  
                            மீண்டும் பறக்கிறது தோனியின் மட்டை--அக்டோபர் 2006

(மட்டை பறந்தால் பரவாயில்லை;இங்கிலாந்துக்கு எதிராக எல்லாமே பறக்கிறதே, பந்தைத் தவிர!)

இந்திய விளயாட்டின் மானமும் பறக்கிறது, சர்வதேச ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விதித்த தடையினால்.

அதைப்பற்றி என்ன கவலை.பதவி வேண்டும் .5 நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி கொண்டாட வேண்டும் அதுதான் முக்கியம்!

நாசமாய்ப் போகட்டும் நாட்டின் விளையாட்டுத் துறை!