Saturday, January 26, 2013

மாடி வீட்டு ஏழை!



தமிழ்த் திரையில் மக்கள் திலகமும்,நடிகர் திலகமும் கோலோச்சி வந்த காலத்தில், அவர்களுக்கு இணையாக,சில நேரம் அதிகமாகவும் சம்பளம் வாங்கிய நடிகர்.

பின்னணிப் பாடல்களில் யோடலிங்(கிஷோர் குமார் போல்) பிரபலப் படுத்தியவர்.

பாடி நடிக்கும் நடிகர்.ஆங்கில நடனம் ஆடத் தெரிந்தவர்.

நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணி வகுத்தவர்.

ஒரு அரச வாழ்க்கை வாழ்ந்தவர்.

ஆனால் மறையும்போது மிகுந்த ஏழ்மை நிலை அடைந்தவர்.

சென்னையின் முக்கிய இடமான கிரீன்வேஸ் சாலையில்,20 கிரவுண்டு நிலத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு கட்டி வந்தவர்,

அந்தவீட்டு மாடிக்கே நேராக காரில் செல்லும்படி வசதியுடன் கட்ட எண்ணியவர்.

மாடி வீடு கட்டி வந்த அவர் ஏழையாக இறந்தார்.

நீதி மன்றம் அவரது சொத்தைப் பறிமுதல் செய்தது.

அவர் அப்போது தயாரித்து வந்த படத்தின் பெயர் “மாடி வீட்டு ஏழை”

தீர்க்கதரிசனமா?தன்னைக் குறித்தே அப்பெயர் வைத்தாரா?

உச்சத்தில் வாழ்ந்தவர் நிலை தாழ்ந்த காரணம் என்ன?

நகைச்சுவை நடிகரான அவர் வாழ்க்கையே சோக மயமானதுதான்.

மணமான சில மாதங்களிலேயே மனைவியை அவள் காதலனுடன் அனுப்பிப் புரட்சி செய்தவர்.

அவர் எடுத்து வந்த மாடி வீட்டு ஏழையில் நடித்து வந்தவர்,திரு.எம்.ஜி.ஆர் அவர்கள்.

அவருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக படம் நின்று போய்,பண இழப்பு ஏற்பட்டு மாடி வீட்டு ஏழையாக இறந்தவர்.

அவரது இறுதிச் சடங்குகளுக்கான செலவை நடிகர்திலகம் அவர்கள் ஏற்றார்.

இத் தகவல்களைத் தருகிறது ” நகைச்சுவைச் சக்ரவர்த்தி  ஜே.பி.சந்திரபாபு” என்ற தலைப்பிடப் பட்ட ,திரு.சொர்ணராஜன் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறுப் புத்தகம்.

பரிதாபமான வாழ்க்கை.

Friday, January 25, 2013

அம்மா போல் ஒரு மனைவி!



என் சமையலில் சுவையே இல்லை

குழம்பில் மணமில்லை,கூட்டில் ருசி இல்லை

பொரியலில் உயிரில்லை,சட்னியில் காரமில்லை

இட்லியில் மென்மையில்லை,தோசை முறுகலில்லை

அவர் அம்மா கைப் பக்குவம்  அடியோடு இல்லை.

அம்மா போல் துணி மடிக்கத் தெரியவில்லை

அழகாகப் பேசத் தெரியவில்லை

இல்லை,இல்லை,இல்லை,இல்லை

எல்லாமே அவர் சொன்ன சொற்கள்!

பொறுக்கவில்லை,விட்டேன் ஒரு அடி

அவர் அம்மா அடி போலவே இருக்கிறதாம்!

                           .............   நொந்துபோன ஒரு மனைவி!


Thursday, January 24, 2013

தங்கத் தோசை திங்க ஆசையா?!


தங்கத் தோசை  --விலை ரூ.1011/-

கிடைக்குமிடம் -பெங்களூரு

ஆலிவ் எண்ணெய் உபயோகித்துச் செய்தது.

ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற்றது!

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!

காணொளி பாருங்கள்!

குப்பனுக்குக் குடிக்கக் கூழில்லையாம்,பணக்காரச்

சுப்பனுக்கு தோசையிலே தங்கம் கேக்குதாம்!

1011 இல் அவன் வீட்டில் ஒரு மாசம் அரிசி பொங்கும்

ஆனா இங்கயோ திங்கவும் வேணுமாம் தங்கம்!

போங்கப்பா!

Wednesday, January 23, 2013

நாடகமே உலகம்!



அந்தச் செய்தி அறிந்ததும் அவன் பரபரப்பானான்.அவனுக்குப் பிடித்த பாடகரின் இசை நிகழ்ச்சி!ஆனால் என்ன முயன்றும் அவனுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.மனச் சோர்வுடன் அமர்ந்திருந்தபோது நண்பன் தொலைபேசியில்அழைத்தான்.அவன் ஒரு பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றி வந்தான்

உனக்கு அவர் இசை மிகவும் பிடிக்குமே !என்னிடம் ஒரு இலவச அனுமதி உள்ளது. எடுத்துக் கொண்டு நீ போய் வா.நிருபர் என்பதால் கிடைத்தது

இவன் மிக மகிழ்ச்சியடைந்தான்

''ஆமாம்...'' என்றான் தயங்கியபடி.

அவர்... முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரிடம் மிகவும் பவ்யமாக, ''ஐயா! ஒரு சந்தேகம்...'' என்றார் இவனை அழைத்துச் சென்றவர்.



''இவரை உங்களுக்குத் தெரியுமா?''
 
உடனே, நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த நபர், நம்ம ஆளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏன், எதுக்குக் கேட்கறீங்க?'' என்றார் அழைத்து வந்தவரிடம்!
 
''இல்ல... இவர், உங்க பத்திரிகையின் நிருபரான்னு தெரிஞ்சுக்கணும்?''
 
''ஆமாம்... இல்லேன்னு யார் சொன்னது?'' - கோபத்துடன் பதில் சொன்னார் அவர்!



   (நன்றி:தமிழ் தாயகம்)