Thursday, May 9, 2013

தத்துவ முத்துக்கள்--(18 ப்ளஸ்!)




1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.


2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவை யில்லை. அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடு வதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்


12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக் கொள்ளுங்கள்


13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்


14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால்  காரணம் நல்லதாய் இருப்பதில்லை


15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித் தான் என எண்ணிக்கொள்


16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்


17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்


18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்


19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்



:):):):):):):):):):):):):):):):):):):):):):): ) :) :)


(இணையம்)

6 comments:

  1. அனைத்தும் அருமை...

    நன்றி...

    ReplyDelete
  2. //நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!// மிகச் சரி

    ReplyDelete
  3. தத்துவ முத்துக்களை உதிர்த்தது யாரோ? அனைத்தும் அருமை. அதுவும் 2, 3, மற்றும் 16 ஆம் இலக்கம் இட்ட கருத்துக்கள் மிக மிக அருமை

    ReplyDelete
  4. //நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்றுவிடுவது வழக்கம். // எனக்கு பொருந்துகிறது.
    18 பிளஸ் 1 = 19, இதற்கு தானா 18 பிளஸ் ?

    ReplyDelete
  5. மிக மிக அருமையான மற்றும் சிந்திக்க வைத்த பதிவு

    ReplyDelete