Thursday, May 30, 2013

நான் ஒரு லட்சாதிபதி!

பதிவுலகில் பலர் அருமையாகக் கதை எழுதுகிறார்கள்.

பலர் சிறப்பாகக் கவிதை எழுதுகிறார்கள்.

பலர் அரசியல் விமர்சனங்கள் அற்புதமாக எழுதுகிறார்கள்.

பலர் திரை விமர்சனங்கள் தெவிட்டாமல் எழுதுகிறார்கள்.

பலர் வாழ்க்கை அனுபவங்களைச் சுவைபட எழுதுகிறார்கள்.

ஆனால் இவன்?(நான் என்பது ஆணவத்தைக்குறிக்குமே!)

பொழுது போக எதையோ எழுதுகிறான்!

ஆங்கிலத்தில் சொல்வது போல் ஒரு jack of all trades கூட இல்லை!


ஆனாலும் இன்று இவன் ஒரு லட்சாதிபதி!

ஆம்!வருகை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி விட்டது!

லட்சியங்கள்தான் ஏதும் இல்லை!

லட்சமாவது இருக்கட்டுமே!

எல்லாம் உங்கள் தயவுதான்!

அதற்காக என் நன்றிகள் .

இவன் தனக்குள் சொல்லிக் கொள்கிறான்”இனியாவது உருப்படியா ஏதாவது எழுதேன்”

”உருப்படி ”யா எழுத வேண்டுமென்றால் சலவைக்கணக்குதான் எழுத வேண்டும்!
(அதில்தானே எத்தனை உருப்படிகள் என்ற கணக்கு வரும்!) 

தொடர்வான்!

:):):)



19 comments:

  1. வாழ்த்துக்கள் குட்டன் ஐயா.

    ReplyDelete


  2. வாழ்க ! எண்ணிக்கை மேலும் வளர்க!

    ReplyDelete
  3. லட்சம் மேலும் லட்சம் லட்சமாய்த் தொடர
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! இலட்சங்கள் கோடிகளாக வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  5. வாழ்த்துகள் குட்டன்! மேலும் பல அடிகள்.... ஹிஹிஹி.... ஹிட்ஸ் உங்களுக்கு கிடைக்கட்டும்!

    ReplyDelete
  6. லட்சமாவது இருக்கட்டுமே!வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி டினேஷ் சுந்தர்

    ReplyDelete