Saturday, August 17, 2013

உள்ளது சொல்வேன்!



நீங்கள் செய்வது/சொல்வது சரியென்றால் கோபப்படத் தேவையில்லை;
தவறென்றால் கோபப்பட உரிமையில்லை

உற்றாரிடம் பொறுமை; பாசம்
மற்றோரிடம் பொறுமை; மரியாதை
நம்மிடம பொறுமை ;தன்னம்பிக்கை
இறைவனிடம் பொறுமை ;ஆழ் நம்பிக்கை


கடந்தகாலத்தைப்பற்றி ஆழச் சிந்திக்காதே
  கண்ணீர் வரும்
எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்காதே
   அச்சம் வரும்
இந்தக்கணத்தை புன்னகையுடன் எதிர்கொள்
   மகிழ்ச்சி நிலவும்


புற அழகில் மயங்காதே
 அக அழகையே தேடு
அழகானவை எல்லாம்
நல்லவையாக இருப்பதில்லை
ஆனால் நல்லவையெல்லாம்
அழகானவைதான்

விரல்களின் இடையே
  இடைவெளி ஏன்?
வாழ்வில் நேசமான ஒருவர் வந்து
  தன் விரல்களை இடைவெளியின்றி
இணைத்து இருவரும் ஒருவராகத்தான்!
--------------------------------------------------------------

வார இறுதி மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும்!

9 comments:

  1. //புற அழகில் மயங்காதே
    அக அழகையே தேடு
    அழகானவை எல்லாம்
    நல்லவையாக இருப்பதில்லை
    ஆனால் நல்லவையெல்லாம்
    அழகானவைதான்// உண்மை

    ReplyDelete
  2. வணக்கம்
    கடந்தகாலத்தைப்பற்றி ஆழச் சிந்திக்காதே
    கண்ணீர் வரும்
    எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்காதே
    அச்சம் வரும்
    இந்தக்கணத்தை புன்னகையுடன் எதிர்கொள்
    மகிழ்ச்சி நிலவும்

    உண்மைதான் நீங்கள் சொல்வது சரியான கவிதை மிக அர்த்தம்முள்ள கவிதை வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் வருவது முதல் தடவை வாருங்கள் நம்மபக்கமும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  3. இந்தக்கணத்தை புன்னகையுடன் எதிர்கொள் மகிழ்ச்சி நிலவும்//உண்மைதான்

    ReplyDelete
  4. சுருக்கமான ஆயினும் அருமையான
    அவசியமான பகிர்வு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //நீங்கள் செய்வது/சொல்வது சரியென்றால் கோபப்படத் தேவையில்லை;
    தவறென்றால் கோபப்பட உரிமையில்லை.//

    ஆனால் நாம் இதை பின்பற்றுவதில்லையே!

    வார இறுதியில் பகிர்ந்துள்ள நல்ல கருத்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  6. அழகானவை எல்லாம்
    //நல்லவையாக இருப்பதில்லை
    ஆனால் நல்லவையெல்லாம்
    அழகானவைதான்

    விரல்களின் இடையே
    இடைவெளி ஏன்?
    வாழ்வில் நேசமான ஒருவர் வந்து
    தன் விரல்களை இடைவெளியின்றி
    இணைத்து இருவரும் ஒருவராகத்தான்!//
    கலக்கல் குட்டன்

    ReplyDelete
  7. வாழ்வில் நேசமான ஒருவர் வந்து
    தன் விரல்களை இடைவெளியின்றி
    இணைத்து இருவரும் ஒருவராகத்தான்!//

    அருமையான வரிகள். இறைவன் படைப்பில் எதுவும் காரணம் இல்லாமல் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

    ReplyDelete