Sunday, December 23, 2012

சண்டேன்னா ஒண்ணு!!



ஒரு ஊரில் ஒரு அழகில்லாத பெண்ணிருந்தாள்.

அவ்வளவாக வதியும் இல்லாத குடும்பம்.

அவள் கணவன் அவளைக் கவனிப்பதேயில்லை.

ஒரு நாள் ஒரு மரத்தடியில் அமர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது,மரத்திலிருந்த தேவதை வந்து அவளுக்கு மூன்று வரங்கள் தருவதாகச் சொல்லிற்று.

தேவதை மேலும் சொன்னது,நீ எதைக்கேட்டுப் பெற்றாலும் அதை விடப்பத்து மடங்கு அதிகமாக உன் கணவனுக்கும் கிடைக்கும் என்று.

அவள் ஒப்புக்கொண்டாள்.

முதலாவதாகக் கேட்டாள்”உலகத்திலேயே சிறந்த அழகியாக வேண்டும்”

தேவதை கேட்டது”உன் கணவனும் மிக அழகானவனாவானே?”

“பரவாயில்லை.நான்தான் உலக அழகி எனவே அவன் என்னை விட்டுப் போக மாட்டான்;கணவனும் அழகாய் இருப்பது எனக்குப் பெருமைதானே”அவள் சொன்னாள்.

வரம் கிடைத்து அவள் உலக அழகியானாள்.

இரண்டாவதாகக் கேட்டாள்”உலகிலேயே மிகப் பெரிய பணக்காரியாக வேண்டும்”

தேவதை மீண்டும் கேட்ட்து “உன் கணவனும் பத்து மடங்கு பணக்காரனாவானே”

“பரவாயில்லை.என் பணம், அவர் பணம்;அவர் பணம்,என் பணம்”அவள் சொன்னாள்.

 அதுவும் கிடைத்து.

மூன்றாவதாகக் கேட்டாள்……

 “எனக்கு லேசான மாரடைப்பு வரவேண்டும்!!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

20 comments:

  1. அடபாவிகளே....

    கணவனை கொல்றது இவர்களுக்கு அம்புட்டு இஷ்டம்...

    ReplyDelete
    Replies
    1. ஹா,ஹா
      நன்றி ஆசிரியர் ஐயா1

      Delete
  2. இதென்ன விளையாட்டு
    சரி இதையும் படிங்க நீங்க மறந்துட்டீங்கhttp://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_2144.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் ரசித்தேன்
      நன்றி

      Delete
  3. எனக்கு ஒரு கண்ணு போவணும்னு கேட்டிருக்கலாம்............!!

    ReplyDelete
    Replies
    1. இப்பக் கணவ்னே போய்விடுவானே!
      நன்றி ஜயதேவ்

      Delete
  4. அந்த தேவதை எங்க இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எதுக்கு சகோ!
      நன்றி

      Delete
  5. இதெல்லாம் சதி திட்டாம் ஆமா! :-))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  6. மாரடைப்பு வேண்டும் என்று விரும்பியவள், பின் ஏன் அழகையும் பணத்தையும் விரும்பினாள்? அதை முதலிலேயே கேட்டிருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. சிறிய மாரடைப்பு;பிழைத்துக் கொள்வாள்.கணவனுக்கு பத்து மடங்கு பெரிய அட்டாக்;என்ன ஆகும்?
      நன்றி

      Delete
  7. அடப்பாவி..அடப்பாவி..

    ReplyDelete
  8. பழிக்குப் பழியா ? ஆனாலும் கொடுமை!

    ReplyDelete
    Replies
    1. அவளுக்கு வேண்டியது!
      நன்றி புலவர் ஐயா

      Delete